கொரோனா தொற்றின் தீவிரத்தால் கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கி குறிப்பாக நிலுவை பாடங்களுக்கு(அரியர்ஸ்) தேர்வு கட்டணம் செலுத்தி இருந்தாலே அந்த பாடங்களுக்கும் தேர்ச்சி வழங்கி அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
தேர்வினை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. தமிழக அரசின் கீழ் இயங்கும் உயர்கல்வித் துறையில் ஒரு நிலைப்பாடும், பள்ளிக்கல்வித் துறையில் ஒரு நிலைப்பாடும் எடுப்பது ஏற்புடையது அல்ல என்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் பள்ளி மாணவர்களை தவிர்த்து கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் தேர்ச்சி அறிவித்திருப்பதில் உள்நோக்கம் இருக்கக்கூடும் என்கிற சந்தேகம் இருப்பதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க தலைவர் தியாகராஜன், கல்லூரியில் பயில்கின்ற அரியர் மாணவர்களை தேர்ச்சி அடையச் செய்திருப்பதில் உள்நோக்கம் இருப்பதாகவும், இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு பத்தாம் வகுப்பு தனித்தேர்வு எழுத உள்ள சுமார் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்க வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்









