மகாபாரதப் போர் ஆடி ஒன்று துவங்கி ஆடி 18 வரை பதினெட்டு நாட்கள் நடைபெற்றது. போரின் முடிவில் பாண்டவர்கள் கெளரவர்களை வென்று அரசுரிமை பெற்றனர்.
வெற்றிபெற்ற பின்னர் ஆடி பதினெட்டு அன்று ஆற்றில் குளித்துவிட்டுப் போரிட்ட போர்க்கருவிகளான கத்தி, கேடயம் எனப் போர்க்கருவிகள் கழுவியதன் நினைவாகவே ஆடி நோன்பு கொண்டாடுகிறோம்.
எனவே பாண்டவர்கள் போரில் இறந்த தங்களது உறவினர்களுக்குத் திதி கொடுத்த தினமே ஆடி பதினெட்டு விழா
போர் துவங்குவதற்கு முன்பாகப் போரில் வெற்றிபெற யாரேனும் ஒருவரைத் தங்கள் பக்கம் பலிகொடுக்க வேண்டும். களப்பலி என்பார்கள். போரில் வெற்றி பெற பாண்டவர்கள் தங்கள் பக்கம் தங்களது மகனான அரவாணைப் பலி கொடுத்தனர். (படுகளம்).
அரவான் இதற்காகவே படைக்கப்பட்டவன் இவன் நாககன்னிகை உலூபி என்பவளுக்கும் அர்ஜூனனுக்கும் பிறந்தவன். ஹரனான சிவனின் அம்சமாகப் பிறந்தவன் ஹரவான்.
இந்த ஹரவான் களப்பலி நினைவாக இன்றும் ஆடி ஒன்று அன்று தேங்காய்சுடும் நோன்பு கொண்டாடுவர்.
சிறுவர்கள் தேங்காய் சுட்டு விளையாடுவர்.
ஆடிபதினெட்டு கொண்டாட்டம்:
ஆடி பதினேட்டு தினம், ஊர்க்கோமாளி கோமாளி வேஷம் போட்டு ஆடுவார். ஒவ்வொரு ஊரிலும் ஊர்க்கோமாளி
முன்னர் இருந்தார்.
ஆடி பதினெட்டிற்குப் பத்து நாட்கள் முன்பாக நவதானியங்களை ஒரு தட்டில் தூவி, மண் அல்லது எரு கலந்து மூடி வைப்பார்கள். அது வெண்மையாக முளைத்து வளர்ந்திருக்கும். அதை முளைப்பாலிகை அல்லது முளைப்பாரி என்பார்கள்.
ஆடி18 அன்று பிற்பகல் வேளையில் முளைபாலிகையை ஏந்தி ஊர்வலமாக ஆற்றுக்குச் செல்வர். தூய்மையான இடத்தில், பசுஞ்சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைப்பர். அவரின் முன்னால், முளைப்பாலிகைகளை வரிசையாக வைப்பார்கள்.
அது முடிந்ததும்.... பச்சரிசி, சர்க்கரையை ஒரு பாத்திரத்தில் போட்டு, நீர் ஊற்றிக் கலந்து விநாயகரின் முன்னால் வைத்து வேண்டுவார்கள்.
வயதான சுமங்கலி ஒருவர், அங்கு வந்திருக்கும் பெண்களுக்கு மஞ்சள் தடவிய நூலைக் கொடுப்பார். சிலர் கைகளிலும், சிலர் கழுத்திலுமாக கட்டிக் கொள்வார்கள். அதன் பின், அவரவர் கொண்டு வந்த முளைப்பாலிகை, பனை ஓலைகளால் செய்யப்பட்ட வட்டமான காதோலை, கருகமணி ஆகியவற்றை நீரில் விடுவர். நுரைத்துச் சுழன்று வரும் காவிரித்தாயின் வரவால் பயிர் பச்சை எல்லாம் தழைக்கப் போகின்றன.
இப்போது காவிரிக்கு கருவுற்று இருக்கிறாள் என்ற ஐதீகத்தில் தான், இவையெல்லாம் செய்யப்படுகின்றன. சிறுவர்கள் சப்பரம் என்ற ஒன்றை (தேர் போல சிறியதாக இருக்கும்) அழகாக அலங்கரித்து, அதிகாலையில் இருந்தே வீதிகளில் சத்தமிட்டு இழுத்தபடி ஓடுவார்கள். மாலையில், அந்தச் சப்பரத்தின் உள்ளே, ஒரு சிறிய அகல்விளக்கை வைத்து மெதுவாக இழுத்து வருவார்கள்.
சிறுமிகளும் கன்னியரும் சுமங்கலியரும் காவிரி நதிக்கரையில் கூடி - தலை வாழையிலையில் - காதோலை கருகமணி, வளையல்கள், தாம்பூலம், எலுமிச்சங்கனி, விளாம்பழம், நாவற்பழம், வாழைப்பழம், பூச்சரம் இவற்றுடன் காப்பரிசியும் படைத்து தீபம் ஏற்றி தேங்காய் உடைத்து கற்பூரங்காட்டி வணங்கி - மஞ்சள் தடவிய நூலினை பழுத்த சுமங்கலிகளின் கையால் வாங்கி கழுத்தில் அணிந்து கொண்டு காவிரியில் பூச்சரங்களுடன் தீபங்களை மிதக்க விடுவது - பரவசமான மங்கல நிகழ்ச்சியாகும்.
ஸ்ரீ ரங்கநாதர் தங்கைக்கு சீர்:
ஆடிப்பதினெட்டு அன்று - ஸ்ரீரங்கத்தில் காவிரிக்கரையின் அம்மா மண்டப படித்துறையில் - நம்பெருமாள் எழுந்தருளி - யானையின் மீது சீர்வரிசை கொண்டுவந்து கங்கையினும் புனிதமான காவிரிக்கு சகல மரியாதையுடன் சமர்ப்பிக்கின்றார்.🙏🌹🌈
வெற்றிபெற்ற பின்னர் ஆடி பதினெட்டு அன்று ஆற்றில் குளித்துவிட்டுப் போரிட்ட போர்க்கருவிகளான கத்தி, கேடயம் எனப் போர்க்கருவிகள் கழுவியதன் நினைவாகவே ஆடி நோன்பு கொண்டாடுகிறோம்.
எனவே பாண்டவர்கள் போரில் இறந்த தங்களது உறவினர்களுக்குத் திதி கொடுத்த தினமே ஆடி பதினெட்டு விழா
போர் துவங்குவதற்கு முன்பாகப் போரில் வெற்றிபெற யாரேனும் ஒருவரைத் தங்கள் பக்கம் பலிகொடுக்க வேண்டும். களப்பலி என்பார்கள். போரில் வெற்றி பெற பாண்டவர்கள் தங்கள் பக்கம் தங்களது மகனான அரவாணைப் பலி கொடுத்தனர். (படுகளம்).
அரவான் இதற்காகவே படைக்கப்பட்டவன் இவன் நாககன்னிகை உலூபி என்பவளுக்கும் அர்ஜூனனுக்கும் பிறந்தவன். ஹரனான சிவனின் அம்சமாகப் பிறந்தவன் ஹரவான்.
இந்த ஹரவான் களப்பலி நினைவாக இன்றும் ஆடி ஒன்று அன்று தேங்காய்சுடும் நோன்பு கொண்டாடுவர்.
சிறுவர்கள் தேங்காய் சுட்டு விளையாடுவர்.
ஆடிபதினெட்டு கொண்டாட்டம்:
ஆடி பதினேட்டு தினம், ஊர்க்கோமாளி கோமாளி வேஷம் போட்டு ஆடுவார். ஒவ்வொரு ஊரிலும் ஊர்க்கோமாளி
முன்னர் இருந்தார்.
ஆடி பதினெட்டிற்குப் பத்து நாட்கள் முன்பாக நவதானியங்களை ஒரு தட்டில் தூவி, மண் அல்லது எரு கலந்து மூடி வைப்பார்கள். அது வெண்மையாக முளைத்து வளர்ந்திருக்கும். அதை முளைப்பாலிகை அல்லது முளைப்பாரி என்பார்கள்.
ஆடி18 அன்று பிற்பகல் வேளையில் முளைபாலிகையை ஏந்தி ஊர்வலமாக ஆற்றுக்குச் செல்வர். தூய்மையான இடத்தில், பசுஞ்சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைப்பர். அவரின் முன்னால், முளைப்பாலிகைகளை வரிசையாக வைப்பார்கள்.
அது முடிந்ததும்.... பச்சரிசி, சர்க்கரையை ஒரு பாத்திரத்தில் போட்டு, நீர் ஊற்றிக் கலந்து விநாயகரின் முன்னால் வைத்து வேண்டுவார்கள்.
வயதான சுமங்கலி ஒருவர், அங்கு வந்திருக்கும் பெண்களுக்கு மஞ்சள் தடவிய நூலைக் கொடுப்பார். சிலர் கைகளிலும், சிலர் கழுத்திலுமாக கட்டிக் கொள்வார்கள். அதன் பின், அவரவர் கொண்டு வந்த முளைப்பாலிகை, பனை ஓலைகளால் செய்யப்பட்ட வட்டமான காதோலை, கருகமணி ஆகியவற்றை நீரில் விடுவர். நுரைத்துச் சுழன்று வரும் காவிரித்தாயின் வரவால் பயிர் பச்சை எல்லாம் தழைக்கப் போகின்றன.
இப்போது காவிரிக்கு கருவுற்று இருக்கிறாள் என்ற ஐதீகத்தில் தான், இவையெல்லாம் செய்யப்படுகின்றன. சிறுவர்கள் சப்பரம் என்ற ஒன்றை (தேர் போல சிறியதாக இருக்கும்) அழகாக அலங்கரித்து, அதிகாலையில் இருந்தே வீதிகளில் சத்தமிட்டு இழுத்தபடி ஓடுவார்கள். மாலையில், அந்தச் சப்பரத்தின் உள்ளே, ஒரு சிறிய அகல்விளக்கை வைத்து மெதுவாக இழுத்து வருவார்கள்.
சிறுமிகளும் கன்னியரும் சுமங்கலியரும் காவிரி நதிக்கரையில் கூடி - தலை வாழையிலையில் - காதோலை கருகமணி, வளையல்கள், தாம்பூலம், எலுமிச்சங்கனி, விளாம்பழம், நாவற்பழம், வாழைப்பழம், பூச்சரம் இவற்றுடன் காப்பரிசியும் படைத்து தீபம் ஏற்றி தேங்காய் உடைத்து கற்பூரங்காட்டி வணங்கி - மஞ்சள் தடவிய நூலினை பழுத்த சுமங்கலிகளின் கையால் வாங்கி கழுத்தில் அணிந்து கொண்டு காவிரியில் பூச்சரங்களுடன் தீபங்களை மிதக்க விடுவது - பரவசமான மங்கல நிகழ்ச்சியாகும்.
ஸ்ரீ ரங்கநாதர் தங்கைக்கு சீர்:
ஆடிப்பதினெட்டு அன்று - ஸ்ரீரங்கத்தில் காவிரிக்கரையின் அம்மா மண்டப படித்துறையில் - நம்பெருமாள் எழுந்தருளி - யானையின் மீது சீர்வரிசை கொண்டுவந்து கங்கையினும் புனிதமான காவிரிக்கு சகல மரியாதையுடன் சமர்ப்பிக்கின்றார்.🙏🌹🌈
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...