பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதால், தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் அனைவரும், தேர்ச்சி செய்யப்பட்டனர். மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு தேர்வு அடிப்படையில், மதிப்பெண்கள் நிர்ணயம் செய்யப்பட்டன.இந்நிலையில், 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு, பிளஸ் 1 மாணவர் சேர்க்கை நேற்று துவங்கியது.
மாணவர்கள் விரும்பும் பாடப் பிரிவுகளை வழங்க வேண்டும். எந்த காரணத்துக்காகவும், அரசு பட்டியலிடாத எந்த வித கட்டணம் மற்றும் நன்கொடைகள் வசூலிக்கக் கூடாது. புகார்கள் வந்தால், தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.








