கொரோனா வைரஸ் தொற்றால் இந்த
ஆண்டுக்கான ஐபிஎல் டி20 லீக்கை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ
முடிவு செய்தது. செப்டம்பர் 19-ந்தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரை
நடைபெறும் என ஐபிஎல் சேர்மன் பிரிஜேஷ் பட்டேல் தெரிவித்திருந்தார்.
ஆனால்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆகஸ்ட் 2-ந்தேதி (இன்று) நடைபெறும் ஐபிஎல் ஆட்சி
மன்றக் குழுவில் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இன்று
ஐபிஎல் ஆட்சி மன்றக்குழு நடைபெற்றது. கூட்டத்திற்குப் பிறகு ஐக்கிய அரபு
அமீரகத்தில் போட்டியை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்து விட்டதாகவும்,
போட்டி செப்டம்பர் 19-ந்தேதி தொடங்கி நவம்பர் 10-ந்தேி வரை நடைபெறும் என
அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வரும் 26-ந்தேதி இந்திய வீரர்கள் ஐக்கிய அரபு
எமிரேட்ஸ் புறப்படுவார்கள், போட்டிகள் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு
தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பெண்கள் ஐபிஎல் லீக்கிற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.