மாணவர்கள் 500-க்கு 500 மார்க் வாங்கிய ரகசியம் இதுதான்..!''- உண்மையை உடைக்கும் தனியார் பள்ளிகள்,. Vikatan Exclusive - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


மாணவர்கள் 500-க்கு 500 மார்க் வாங்கிய ரகசியம் இதுதான்..!''- உண்மையை உடைக்கும் தனியார் பள்ளிகள்,. Vikatan Exclusive


கொரோனா ஊரடங்கு தொடர்ச்சியாக நீடித்துவந்த காரணத்தால், தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்த பள்ளிக் கல்வித்துறை, 'அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற்றவர்களாக' அறிவித்தது. அடுத்தகட்டமாக, காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் ஏற்கெனவே மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களையும், அவர்களது வருகைப் பதிவேட்டையும் கணக்கில்கொண்டு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டன.

தமிழக பள்ளிக் கல்வித்துறை வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு, பெரும்பான்மையான மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் வாங்கியிருப்பது பலத்த சந்தேகத்தையும், விவாத அலைகளையும் எழுப்பியிருக்கிறது.

இது குறித்துப் பேசும் ஆசிரியர் சங்க நிர்வாகிகள், ''உயிர்க்கொல்லி நோயான கொரோனா தொற்றிலிருந்து மாணவர்களைப் பாதுகாப்பதற்காக 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்த அரசின் முடிவு வரவேற்கத்தக்கது. ஆனால், மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மதிப்பெண்களைக் கணக்கிடுவதில்தான் அரசு கோட்டைவிட்டுவிட்டது.

அதாவது, '10-ம் வகுப்பில் ஒரு மாணவன் காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளில் பெற்றுள்ள மதிப்பெண்களின் அடிப்படையில், 80 % மதிப்பெண்களும், அந்த மாணவனின் பள்ளி வருகைப் பதிவேட்டுக் கணக்கை அடிப்படையாக வைத்து 20 % மதிப்பெண்களுமாகக் கணக்கிட்டு அந்த மாணவனின் பொதுத்தேர்வு மதிப்பெண் நிர்ணயிக்கப்படும்' என பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது.


இதையடுத்து, மாநிலம் முழுவதுமுள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளிலிருந்து 10-ம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண்கள் மற்றும் வருகைப் பதிவேட்டு விவரங்கள் மாவட்டக் கல்வி அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

இதில், தங்கள் கைவசமிருந்த உண்மையான மதிப்பெண் பட்டியல் மற்றும் வருகைப்பதிவேடு குறித்த கணக்குகளை ஒப்படைத்த பள்ளிகளும் உண்டு. மாறாக, தங்கள் பள்ளிக்குப் பெயர் கிடைக்க வேண்டும் என்ற காரணத்துக்காக, பொய்யான ஆவணங்களை உருவாக்கி, கல்வி அலுவலகத்துக்கு அனுப்பிவைத்த பள்ளிகளும் உண்டு. குறிப்பாக, சில தனியார் பள்ளிகள், தங்கள் பள்ளி கல்வியில் சிறந்து விளங்குவதாகக் காட்டிக்கொள்வதற்காக ஏற்கெனவே உள்ள காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்கள் பட்டியலை மறைத்துவிட்டு, புதிதாக அதிகப்படியான மதிப்பெண்கள்கொண்ட பட்டியலைத் தயார் செய்து பள்ளிக் கல்வித்துறைக்கு அனுப்பிவைத்துள்ளன.

பள்ளிக் கல்வித்துறையும்கூட இது குறித்து அதிக அக்கறை எடுத்துக்கொண்டு அலசி ஆராயாமல், பள்ளிகள் கொடுத்த புள்ளிவிவரங்களின் அடிப்படையிலேயே மதிப்பெண்களை வாரி வழங்கியிருக்கிறது. ஒவ்வொரு தனியார் பள்ளியிலும் 500 மதிப்பெண்ணுக்கு 498, 497 மதிப்பெண்கள் வாங்கிய மாணவர்களை நிறைய பார்க்கமுடிகிறது. சிலர் 500-க்கு 500 மதிப்பெண்கள் வாங்கியிருப்பதுதான் உச்சகட்ட மோசடி.

தமிழ், ஆங்கிலம் போன்ற பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்கள் வாங்குவதெல்லாம் அரிதிலும் அரிது. அப்படியிருக்கும்போது, இவர்கள் எப்படி 500-க்கு 500 மதிப்பெண்கள் வாங்க முடியும்? அப்படியென்றால், காலாண்டுத் தேர்வில், அனைத்துப் பாடங்களிலும் தலா 100 மதிப்பெண்கள், அரையாண்டுத் தேர்விலும் அனைத்துப் பாடங்களிலும் தலா 100 மதிப்பெண்கள் வாங்கியிருந்திருக்க வேண்டும். மேலும், ஒருநாள்கூட விடுப்பு எடுக்காமல், அனைத்துப் பள்ளி நாள்களிலும் வந்திருக்க வேண்டும். இப்படியெல்லாம் நடந்திருந்தால் மட்டுமே ஒரு மாணவன், பொதுத்தேர்வில் 500-க்கு 500 மார்க் எடுத்திருக்க முடியும். இதெல்லாம் சாத்தியம்தானா?


பள்ளிகள்தான் தங்கள் சுயநலத்துக்காக இப்படி நடந்துகொள்கின்றன என்றால், இந்தத் தவறுகளை உரிய முறையில் கண்காணித்துக் களைய வேண்டிய பள்ளிக் கல்வித்துறையும் கண்களை மூடிக்கொண்டு மதிப்பெண்களை கொட்டிக் கொடுத்திருப்பதுதான் வேதனையாக இருக்கிறது. ஏனெனில், கடந்த வருடம்தான் 10-ம் வகுப்புக்குப் புதிய பாடத்திட்டம் அறிமுகமானது. சி.பி.எஸ். பாடத்திட்டத்துக்கு இணையான அந்தப் பாடங்களை முதன்முறையாகப் படித்துப் புரிந்துகொள்வதென்பது ஆசிரியர்களுக்கே சவாலானது. இந்த நிலையில், மாணவர்கள் எப்படி அந்தப் பாடங்களை முழுமையாக உள்வாங்கிப் படித்து, 500-க்கு 500 மதிப்பெண்கள் பெற முடியும்? இதுமட்டுமல்ல... புதிய பாடத்திட்டம் என்பதால், மிகவும் தாமதமாகத்தான் பள்ளிகளுக்கு புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட்டன என்பதும் இங்கே கவனிக்கப்பட வேண்டியது.


மதிப்பெண் பட்டியல்

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H