அரசுப் பள்ளி மாணவர்கள் அனைவரையும் விஞ்ஞானிகளாக்குவதே இலக்கு!’ - அசத்தும் கரூர் ஆசிரியர் : - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Friday 14 August 2020

அரசுப் பள்ளி மாணவர்கள் அனைவரையும் விஞ்ஞானிகளாக்குவதே இலக்கு!’ - அசத்தும் கரூர் ஆசிரியர் :

துரை.வேம்பையன்-VIKATAN

ஆன்லைன் உரையாடல் நடத்தும் தனபால்
`இணையவழிக் கற்றல் மூலம் தொடர்ந்து மாணவர்களிடம் உரையாடி, அவர்களை இளம் விஞ்ஞானிகளாக்கத் தொடர்ந்து முயல்வேன். லாக்டௌன் காலத்தில் மாணவர்களின் அறிவியல் சிந்தனைகளைத் தூண்டும் வகையில் இந்தக் காணொலிக் காட்சி மூலம் நடக்கும் பயிற்சிகள் இருக்கும்< அரசுப் பள்ளி மாணவர்களை இளம் விஞ்ஞானிகளாக உருவாக்க ஏதுவாக, மாணவர்களுடன் தொடர்ந்து உரையாடும் பொருட்டு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அளவில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவின் அறிவியல் பாடத்துக்கான ஆசிரியராக, கரூர் மாவட்ட அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் தேர்வாகியிருப்பது, கரூர் மாவட்ட கல்வியாளர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
கரூர்: `110 கிலோமீட்டர் பயணம்; இலவசப் புத்தகம்' - வீட்டின் அருகே பாடம் நடத்திய ஆசிரியர் இளம் விஞ்ஞானிகளை உருவாக்குவோம்' என்ற முயற்சியில் பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம் இறங்கியிருக்கிறது. இதன் மூலம், இணையவழியில் காணொலிக் காட்சி மூலமாக அரசுப் பள்ளியில் மாணவர்களின் கற்றல், கற்பித்தல் சார்ந்த ஆக்கபூர்வமான கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில், அறிவியல் பாடத்துக்காக தமிழகம் மற்றும் புதுச்சேரி அளவில் கரூர் மாவட்டம், பஞ்சப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த முதுகலை இயற்பியல் ஆசிரியர் தனபால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆன்லைன் உடையாடல்
இணையவழி காணொலிக் காட்சி நிகழ்வுகள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. அதன்படி, சமீபத்தில் நடைபெற்ற அந்த நிகழ்வில், பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் மாநிலத் தலைவர் வசந்தி தேவி வரவேற்புரை நிகழ்த்தினார். கும்பகோணம் ஆசிரியை புவனா அறிமுக உரையாற்றினார். தொடர்ந்து கரூர் மாவட்டம், பஞ்சப்பட்டி, அரசு மேல்நிலைப்பள்ளி, முதுகலை இயற்பியல் ஆசிரியர் தனபால்,`அரசுப் பள்ளியில் இளம் விஞ்ஞானி மாணவர்களை உருவாக்குவோம்' என்ற தலைப்பில் உரையாற்றினார்.


அவர் வழிகாட்டி ஆசிரியராக அரசுப் பள்ளி மாணவர்களுடன், கடந்த 14 ஆண்டுகளில் அறிவியல் கண்டுபிடிப்பு படைப்புகளைக் காட்சிப்படுத்தும்விதத்தில் மாவட்டம், மாநிலம், தென்னிந்தியா, தேசியம் மற்றும் சர்வதேச அளவில் (ஜப்பான், பின்லாந்து, ஸ்வீடன்) மாணவர்களுடன் 88,300 கி.மீ பயணித்திருக்கிறார். அதன் மூலம் பல்வேறு விருதுகளும் பரிசுகளும் பெற்ற அறிவியல் பயணம் குறித்த தனது அனுபவங்களைக்கொண்டு, அரசுப்பள்ளியில் 404 மாணவர்களை `இளம் விஞ்ஞானிகள்சான்று பெறும் வகையில் உருவாக்கியிருக்கிறார். 20 அறிவியல் கண்டுபிடிப்புச் செயல்பாடுகள், களப்பயண அனுபவங்கள், ஆய்வுக் கட்டுரைகள், அறிவியல் நாடகம், குறும்படம் தயாரித்தல், மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்துதல் என தீவிரமாக இயங்கிவந்திருக்கிறார். அதன் மூலம் சுற்றுச்சூழல் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க எடுத்துக்கொண்ட 



அதை எல்லோருக்கும் எளிதில் புரியும் வகையில், 100 விளக்கக் காட்சிப் படங்கள் மூலம் காணொலியில் விளக்கினார். மேலும், 25-க்கும் மேற்பட்ட எளிய இயற்பியல் பரிசோதனைகளையும் செயல் விளக்கமாகச் செய்து காட்டினார். இந்த நிகழ்வில் பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் மாநிலச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் இணையவழியில் வினாக்கள் கேட்டு தனபாலிடம் உரிய விளக்கம் பெற்றனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் இது போன்ற இணையவழிக் கற்றல் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெறத் தொடங்கியிருக்கிறது.
இது குறித்து, ஆசிரியர் தனபாலிடம் பேசினோம்.
``இணையவழிக் கற்றல் மூலம் மாணவர்களிடம் உரையாடி, அவர்களை இளம் விஞ்ஞானிகளாக்கும் முயற்சியைத் தொடர்ந்து மேற்கொள்வேன். லாக்டௌன் காலத்தில் மாணவர்களின் கவனம் வேறு திசையில் செல்லாமல் இருக்கவும், அவர்களின் அறிவியல் சிந்தனைகளைத் தூண்டும்வகையில் இந்த காணொலிக் காட்சி மூலம் நடக்கும் பயிற்சிகள் இருக்கும்.
அரசுப் பள்ளி மாணவர்கள் அனைவரையும் விஞ்ஞானிகளாக மாற்றுவதே இந்த முயற்சியின் உச்சபட்ச இலக்கு. அதை நிச்சயம் சாதிப்போம்" என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H