கவச உடைகள் மூலம், பெட்ரோலுக்கு நிகரான எரிபொருளை உருவாக்க முடியும்' என, இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள பெட்ரோலியம் மற்றும் எரிசக்தி பல்கலையைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இதை கண்டுபிடித்துள்ளனர். இது தொடர்பான ஆய்வு கட்டுரை, சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:தற்போது, கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி, மருந்து கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. அதே நேரத்தில், பயன்படுத்தப்பட்ட முழு உடல் கவச உடைகளை அழிப்பது தொடர்பாக எந்த முயற்சியும், பெரிய அளவில் நடக்கவில்லை. இந்த கவச உடைகளை, 300 - 400 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில், ஆக்சிஜன் இல்லாமல், 'பைராலிசிஸ்' என்ற முறையில் ரசாயன மாற்றத்துக்கு உட்படுத்தலாம்.
அவ்வாறு செய்யும்போது, அதில் இருந்து சக்தி வாய்ந்த எரிபொருள் கிடைக்கும். பூமியில் கிடைக்கும் பெட்ரோலியத்தில் உள்ள அம்சங்கள் பல, இந்த எரிபொருளிலும் உள்ளது.இதன்வாயிலாக, பயன்படுத்தப்பட்ட கவச உடைகளை குப்பையில் வீசுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பையும் தவிர்க்க முடியும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது
(தினமலர்)