கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கால் பள்ளி , கல் லூரிகள்
மூடப்பட்டுள்ளன . இதையடுத்து தனியார் பள்ளி மாணவர்க ளுக்கு ஆன்லைன் மூலம்
பாடம் நடத்தப்பட்டு வருகிறது . ஆனால் கிராமப்புறங்களை சேர்ந்த
மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி முறை என்பது எட்டாக்கனியாகவே உள்ளது .
இதனால்
மாணவர்களின் கற்றல் திறனில் தொய்வு ஏற்படாத வகை யில் பல்வேறு இடங்களில்
ஆசிரியர்கள் வீடுகளுக்கு சென்று பாடம் நடத்தி வருகின்றனர் . அந்த வகையில் ,
தேனி அருகே உப்புக்கோட்டை யில் உள்ள பச்சையப்பா அரசு உதவி பெறும் பள்ளி
ஆசிரியர்களும் , தங் களது பள்ளியில் படிக்கும் மாணவர்களின் கற்றல் திறனை
மேம்படுத் தும் வகையில் வீடுகளுக்கே சென்று பாடம் நடத்தி வருகின்றனர் .
வீடுதேடி
சென்று மாணவர்கள் பாடம் நடத்துவதற்காக பள்ளி தலைமை ஆசிரியர் புவனேசுவரி
தலைமையில் ஆசிரியர் குழு ஏற்படுத் தப்பட்டது . இதையடுத்து சுழற்சி முறையில்
ஒவ்வொரு தெருக்களாக சென்று ஆசிரியர்கள் பாடம் கற்பித்து வருகின்றனர் .
பாடம்
கற்பிக்கும் போது , மாணவர்களை சமூக இடைவெளி விட்டு அமர வைத்து ஆசி
ரியர்கள் பாடம் நடத்துகின்றனர் . ஆசிரியர்களின் இந்த முயற்சிக்கு
பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர் .