சென்னை : 'நீதிமன்ற உத்தரவை மீறி, மாணவர்களிடம் கட்டணம்
வசூலிக்கப்பட்டிருந்தால், பள்ளி பொறுப்பாளர்கள் மீது, அவமதிப்பு நடவடிக்கை
எடுக்கப்படும்' என, சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல், ஊரடங்கு உத்தரவால், கல்வி கட்டணம் செலுத்தும்படி, பெற்றோரை வற்புறுத்தக் கூடாது என, கல்வி நிறுவனங்களுக்கு, ஏப்ரலில், வருவாய் மற்றும்பேரிடர் மேலாண்மை துறை உத்தரவிட்டது.இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், கல்வி நிறுவனங்கள் மனுக்கள் தாக்கல் செய்தன, ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவும், கட்டடங்கள் பராமரிப்பு செலவுக்கும், பணம் தேவைப்படுவதால், கல்வி கட்டணம் வசூலிக்க அனுமதிக்கும்படி, மனுக்களில் கோரப்பட்டன.மனுக்களை, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார்.
ஆகஸ்ட் மாதத்தில், 40 சதவீத கட்டணமும், வகுப்புகள் துவங்கிய பின், இரண்டு மாதங்களில், 35 சதவீத கட்டணமும் வசூலித்துக் கொள்ள, நீதிபதி அனுமதி அளித்தார். இந்த இடைக்கால உத்தரவு, ஜூலை, 17ல் பிறப்பிக்கப்பட்டது.இந்நிலையில், வருவாய் துறை உத்தரவை எதிர்த்து, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன், மேல்நிலைப் பள்ளிகள் சங்கம் சார்பில் தொடரப்பட்ட மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே, ஜூலை, 17ல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு, இந்த மனுவுக்கும் பொருந்தும் என, நீதிபதி உத்தரவிட்டார்.இதையடுத்து, கல்வித்துறை சார்பில் ஆஜரான, கூடுதல் பிளீடர் அன்னலட்சுமி, ''நீதிமன்ற உத்தரவை மீறி, கல்வி கட்டணம் முழுவதையும் செலுத்தும்படி, கல்வி நிறுவனங்கள் வற்புறுத்துவதாக, பெற்றோரிடம் இருந்து புகார்கள்வருகின்றன.
எழுத்துப்பூர்வமாக புகார்கள் அளிக்க, அவர்கள் தயங்குகின்றனர்,'' என்றார். அதைத் தொடர்ந்து, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு:நீதிமன்றத்தின் கவனத்துக்கு வந்த பிரச்னையை, கடுமையாக கருதுகிறேன். வாய்மொழியாக வந்த புகார் அடிப்படையில், கல்வித்துறை உடனடியாக விசாரணை நடத்த வேண்டும். நீதிமன்ற உத்தரவை மீறி, கட்டணம் வசூலிப்பது தெரிய வந்தால், அந்தப் பள்ளிகளுக்கு எதிராக, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.அந்தப் பள்ளிகளின் விபரங்களை, நீதிமன்றத்துக்கு வழங்க வேண்டும்.
நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டது தெரிய வந்தால், அந்தப் பள்ளிகளுக்கு பொறுப்பானவர்களுக்கு எதிராக, அவமதிப்பு நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன். எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, பள்ளி கல்வித்துறை இயக்குனரும், அறிக்கை அளிக்க வேண்டும்.இவ்வாறு, நீதிபதி உத்தர விட்டார். அறிக்கை தாக்கல் செய்வதற்காக, வழக்கு விசாரணையை, வரும், 17க்கு, நீதிபதி தள்ளி வைத்தார்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல், ஊரடங்கு உத்தரவால், கல்வி கட்டணம் செலுத்தும்படி, பெற்றோரை வற்புறுத்தக் கூடாது என, கல்வி நிறுவனங்களுக்கு, ஏப்ரலில், வருவாய் மற்றும்பேரிடர் மேலாண்மை துறை உத்தரவிட்டது.இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், கல்வி நிறுவனங்கள் மனுக்கள் தாக்கல் செய்தன, ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவும், கட்டடங்கள் பராமரிப்பு செலவுக்கும், பணம் தேவைப்படுவதால், கல்வி கட்டணம் வசூலிக்க அனுமதிக்கும்படி, மனுக்களில் கோரப்பட்டன.மனுக்களை, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார்.
ஆகஸ்ட் மாதத்தில், 40 சதவீத கட்டணமும், வகுப்புகள் துவங்கிய பின், இரண்டு மாதங்களில், 35 சதவீத கட்டணமும் வசூலித்துக் கொள்ள, நீதிபதி அனுமதி அளித்தார். இந்த இடைக்கால உத்தரவு, ஜூலை, 17ல் பிறப்பிக்கப்பட்டது.இந்நிலையில், வருவாய் துறை உத்தரவை எதிர்த்து, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன், மேல்நிலைப் பள்ளிகள் சங்கம் சார்பில் தொடரப்பட்ட மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே, ஜூலை, 17ல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு, இந்த மனுவுக்கும் பொருந்தும் என, நீதிபதி உத்தரவிட்டார்.இதையடுத்து, கல்வித்துறை சார்பில் ஆஜரான, கூடுதல் பிளீடர் அன்னலட்சுமி, ''நீதிமன்ற உத்தரவை மீறி, கல்வி கட்டணம் முழுவதையும் செலுத்தும்படி, கல்வி நிறுவனங்கள் வற்புறுத்துவதாக, பெற்றோரிடம் இருந்து புகார்கள்வருகின்றன.
எழுத்துப்பூர்வமாக புகார்கள் அளிக்க, அவர்கள் தயங்குகின்றனர்,'' என்றார். அதைத் தொடர்ந்து, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு:நீதிமன்றத்தின் கவனத்துக்கு வந்த பிரச்னையை, கடுமையாக கருதுகிறேன். வாய்மொழியாக வந்த புகார் அடிப்படையில், கல்வித்துறை உடனடியாக விசாரணை நடத்த வேண்டும். நீதிமன்ற உத்தரவை மீறி, கட்டணம் வசூலிப்பது தெரிய வந்தால், அந்தப் பள்ளிகளுக்கு எதிராக, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.அந்தப் பள்ளிகளின் விபரங்களை, நீதிமன்றத்துக்கு வழங்க வேண்டும்.
நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டது தெரிய வந்தால், அந்தப் பள்ளிகளுக்கு பொறுப்பானவர்களுக்கு எதிராக, அவமதிப்பு நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன். எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, பள்ளி கல்வித்துறை இயக்குனரும், அறிக்கை அளிக்க வேண்டும்.இவ்வாறு, நீதிபதி உத்தர விட்டார். அறிக்கை தாக்கல் செய்வதற்காக, வழக்கு விசாரணையை, வரும், 17க்கு, நீதிபதி தள்ளி வைத்தார்.