தமிழகத்தில் காலியாக உள்ள 10,906 காவலர் பணியிடங்களுக்கு
ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. www.tnusrbonline.org
என்ற இணையதளத்தில் செப்டம்பர் 26-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
அக்டோபர் 26 கடைசி தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 13-இல்
எழுத்துத் தேர்வு நடக்கும். இந்த எழுத்துத் தேர்வு மாவட்டவாரியாக நடக்கும்.
மொத்த எழுத்துத் தேர்வு 1.20 நிமிடங்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்
பின்னர் அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான உடல் தகுதித் தேர்வு பின்னர்
நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு, தேர்வு செய்யப்படுவார்கள்.
மொழிப்பாடம் தமிழ்ப் பாடமாக இருக்க வேண்டும். 10-ஆம் வகுப்புக்கு மேல் படித்துள்ள யாரும் விண்ணப்பிக்கலாம்.
பொதுப்பிரிவு: 18-24 வயது.
மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் 18-26 வயது, பட்டியலினத்தவர் 18-29 வயது, மூன்றாம் பாலினத்தவர் 18-29 வயது, ஆதரவற்ற விதவைப் பெண்கள் 18-35 வயது, முன்னாள் ராணுவத்தினர் 18-45 வயது இருக்கவேண்டும்.
விண்ணப்பம், விண்ணப்பக் கட்டணம், தேர்வு நாள், தேர்வுகள் விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களைக் கீழ்க்கண்ட தேர்வு வாரிய இணைப்பில் காணலாம்.
https://tnusrbonline.org/pdfs/CR_2020_Notification.pdf
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...