கிராம்பு இரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவும்.
இந்திய
இல்லங்களின் அதிகாலை என்பது ஒரு கப் தேநீருடனே துவங்குகிறது. தேநீரின்
ஆரோக்கியம் என்பது உங்கள் சாய்ஸை பொருத்தே உள்ளது. அதை ஆரோக்கியமாக்க
பெரிதாக மெனக்கெட தேவையில்லை. உங்கள் சமையலறையில் இருக்கும் ஒரு சில
பொருட்களே போதுமானது. அந்த வகையில் கிராம்பு பல நன்மைகளைக் கொண்டுள்ளது.
உங்கள் தினசரி தேநீர் தயாரிப்புகளில் கிராம்பை ஏன் சேர்க்க வேண்டும் என்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அவை குறித்து இங்கு விரிவாக காண்போம்.
கிராம்பின் இருக்கும் நன்மைகள் :
கிராம்பு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றங்களால் நிரம்பியுள்ளது. அவை நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, தொற்றுநோய்கள் தாக்காமல் பாதுகாப்பாக இருக்க உதவுகின்றன.
கிராம்பில் உள்ள யூஜெனோல் என்ற எண்ணெய் மூலிகை சேர்மத்தின் நல்ல மூலமாகும்.
பீனட் பட்டர் கடையில் வாங்குவதை விட வீட்டிலேயே ஈசியாக செய்யலாம்..! டிப்ஸ் இதோ.கிராம்பின் வலுவான கிருமி நாசினி பண்புகள் பல்வலி, ஈறுகள் பிரச்னை மற்றும் அல்சர் போன்ற வயிற்று புண்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன
கிராம்புகள் கிருமி நாசினிகள், வைரஸ் தடுப்பு மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகளால் செறிவூட்டப்படுகின்றன. இதில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு தன்மை தொண்டை புண், சளி, இருமல் மற்றும் தலைவலி குணமாக உதவி செய்கிறது.
கிராம்பில் உள்ள யூஜெனோல் செரிமானத்தை எளிதாக்க உதவுகிறது. ஆரோக்கியமான எடை இழப்புக்கு முக்கிய காரணியாகும். மேலும் கிராம்பு இயற்கையாகவே வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது.
கிராம்பு உங்களுக்கு ஒரு அழகான சருமத்தை கொடுக்க உதவும்
கிராம்பு இரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவும். ஜர்னல் நேச்சுரல் மெடிசின் நடத்திய ஆய்வில், நீரிழிவு எலிகளுக்கு கிராம்புகளை கொடுத்து சோதனை செய்ததில் இரத்த சர்க்கரை அளவு குறைவதாக நம்பிக்கைக்குரிய முடிவுகள் கிடைத்தன என தகவல் அளித்துள்ளது.
உடல் எடையை குறைக்க கிரீன் டீ குடிக்கிறீர்களா? எப்போது, எப்படி குடிக்கவேண்டும் என்று தெரியுமா?
கிராம்பு தேநீர் தயாரிப்பது எப்படி?
1. 1 தேக்கரண்டி முழு கிராம்பை எடுத்து அரைக்கவும்.
2. ஒரு வானலியில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து அதனுடன் அரைத்து வைத்துள்ள கிராம்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.
3. 3-4 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க விடுங்கள்.
4. பின்னர் அடுப்பை அணைத்து விட்டு, கொதித்த தேநீரை ஆறவைத்து பரிமாறுங்கள்.
நீங்கள் விரும்பினால் உங்கள் தேநீரை இனிப்பாக மாற்ற ஒரு டீஸ்பூன் தேன் கலக்கலாம். அதிகபட்ச நன்மைகளுக்காக இந்த தேநீரை அதிகாலையில் குடிக்கவும். எதையும் அதிகமாக சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்தை அழிக்கக்கூடும் என்பதை நினைவில் வைத்துகொள்ளுங்கள்.
கிராம்பு வாங்கும் போது கவனிக்க வேண்டியது :
கிராம்பு வாங்கும்போது பெரிய கிராம்புகளை தேர்ந்தெடுங்கள். அதாவது நீங்கள் தலையையும் தண்டுகளையும் தெளிவாக பார்க்கும் வகையில் வாங்குங்கள். பின்னர் அவற்றின் நிறத்தைப் பாருங்கள். அவை சிவப்பு-பழுப்பு நிறமாக இருந்தால், நன்றாக இருக்கின்றன என்று அர்த்தம்.
இது தவிர, மொட்டின் நான்கு இதழ்கள் மற்றும் அவற்றின் உள்ளே இருக்கும் மகரந்தங்களை நீங்கள் அடையாளம் காண முடியும். சிறிய குச்சிகளைப் போல இருக்கும் கிராம்புகளை வாங்க வேண்டாம், ஏனெனில் அவை வெறும் தண்டுகள். காற்று புகாத சேமித்து, ஒளி மற்றும் வெப்பத்திலிருந்து விலகி இருந்தால் ஒரு வருடம் கூட கிராம்பு கெட்டுப்போகாமல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...