பதினெட்டு வித குணங்களில் நல்லவற்றைப் பின்பற்றியும், தீயவற்றைக் களைந்தும் வாழ்க்கைப் படியில் ஏறிச் சென்றால் தான் இறைவன் அருள் நமக்குக் கிடைக்கும் என்பதின் அடிப்படையில் கீதை 18 அத்தியாயங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
1 காமம்:
பற்று உண்டானால் பாசம், மோகம் ஏற்பட்டு புத்தி நாசமடைந்து அழிவு ஏற்படுகிறது என்பதை கீதையின் முதல் அத்யாயம் நமக்கு விளக்குகிறது.
2 குரோதம்:
கோபம் குடியைக் கெடுத்து, கொண்டவனையும் அவன் சுற்றத்தையும் சேர்த்து அழித்து விடும் என்பதை கீதையின் இரண்டாவது அத்யாயம் நமக்கு விளக்குகிறது.
3 லோபம்:
பேராசைக்கு இடம் கொடுத்தால் இருப்பதும் போய்விடும், ஆண்டவனை அடைய முடியாது என்பதை கீதையின் மூன்றாவது அதிகாரம் நமக்கு விளக்குகிறது.
4 மதம்:
யானைக்கு மதம் பிடித்தால் ஊரையே அழித்து விடும் அந்த யானையை அப்போது யாராவது விரும்புவார்களா? அதுபோல் வெறி பிடித்தவனை ஆண்டவன் வெறுத்துவிடுவான் என்பதை கீதையின் நான்காவது அதிகாரம் நமக்கு விளக்குகிறது.
5 மாத்ஸர்யம்:
மனதில் பொறாமையை நிலைநிறுத்தி வாழ்பவனுக்கு, வேறு பகையே வேண்டாம் அதுவே அவனை அழித்துவிடும் என்பதை கீதையின் ஐந்தாவது அதிகாரம் விளக்குகிறது.
6 டம்பம் (வீண் பெருமை):
அசுர குணமானது நமக்குள் இருக்கக்கூடாது என்பதை கீதையின் ஆறாவது அதிகாரம் விளக்குகிறது.
7 அகந்தை:
‘தான்’ என்ற அகந்தை கொண்டவன் ஒரு போதும் வாழ்வில் முன்னேறவே முடியாது. அகந்தை என்பது முடிவில்லா ஒரு சோகச் சுமை. இதனால் ஏற்படும் தீமைகளை கீதையின் ஏழாவது அத்யாயம் நமக்கு எடுத்துச் சொல்கிறது.
8 சாத்வீகம்:
விருப்பு, வெறுப்பு இன்றி கர்மம் செய்தல் வேண்டும். இதனை கீதையின் எட்டாவது அத்யாயம் நமக்கு எடுத்துச் சொல்கிறது.
9 ராஜஸம்:
அகங்காரத்தோடு கருமம் செய்தல் கூடாது இதனை கீதையின் ஒன்பதாவது அத்யாயம் நமக்கு எடுத்துச் சொல்கிறது.
10 தாமஸம்:
அற்ப புத்தியை பற்றி நிற்பது மதி மயக்கத்தால் வினை செய்வது. அப்படி செய்யப்படும் வினையால் ஏற்படும் துன்பம் போன்றவற்றை கீதையின் பத்தாவது அத்யாயம் நமக்கு எடுத்துச் சொல்கிறது.
11 ஞானம்:
எல்லாம் ஆண்டவன் செயல் என்று அறியும் பேரறிவு பற்றி இந்த அத்யாயம் தெளிவாக விளக்குகிறது.
12 மனம்:
நம்மனம் கெடாது, பிறர் மனம் வருந்தாது வாழ வேண்டும் எப்போதும் ஐயன் நினைவே மனதில் இருக்க வேண்டும். அது எப்படி என்பதைத் தான் கீதையின் பன்னிரெண்டாவது அத்யாயம் விளக்குகிறது.
13 அஞ்ஞானம்:
உண்மைப் பொருளை அறிய மாட்டாது. மூடி நிற்கும் இருளை விளக்கி மெய் ஞானத்தை அடைய வழி வகை செய்கிறது இந்த அத்யாயம்.
14 கண்:
ஆண்டவனைப் பார்க்கவும், ஆனந்தக் கண்ணீர் உகுக்கவுமே ஏற்பட்டது இந்த அத்யாயம்.
15 காது:
ஆண்டவனின் மேலான குணங்களைக் கேட்டு, அந்த ஆனந்தக் கடலில் மூழ்க வேண்டும். அது எப்படி என்பதை இந்த அத்யாயம் எடுத்துரைக்கிறது.
16 மூக்கு:
ஆண்டவனின் சன்னதியிலிருந்து வரும் நறுமணத்தை முகர வேண்டும். அத்துடன் பக்தியில் ஆழ்ந்து முக்தி பெரும் வழியை இந்த அத்யாயம் எடுத்துக் கூறுகிறது.
17 நாக்கு:
கடுஞ் சொற்கள் பேசக்கூடாது. அது பற்றிக் கூறுகிறது இந்த அத்யாயம்.
18 மெய்:
இரு கரங்களால் இறைவனை கைகூப்பித் தொழ வேண்டும். கால்களால் ஆண்டவன் சன்னதிக்கு நடந்து செல்ல வேண்டும். உடல் பூமியில் படும்படி விழுந்து ஆண்டவனை நமஸ்கரிக்க வேண்டும்.
Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
பதினெட்டு வித குணங்களில் அடிப்படையில் கீதை:
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |









