கரும்பு தின்றால் கூலியா என்று பழமொழியை கூறுவார்கள். அந்த பழமொழியை மெய்பிக்கும் விதமாக, தூங்குவதற்கு மட்டுமே 1.4 லட்சம் ரூபாய் ஒரு நிறுவனம் சம்பளம் அளிக்கிறது. அதுகுறித்து இந்த வீடியோவில் பார்க்கலாம்.
ஐந்து நட்சத்திர விடுதிகளுக்கு படுக்கை மற்றும் தலையணைகளை தயாரித்து கொடுத்து வருகிறது Delay Love Luxury என்னும் நிறுவனம்.
இந்த 5 நட்சத்திர விடுதியில் பயன்படுத்தும் படுக்கை மற்றும் தலையணையை சோதனை செய்து பார்ப்பதற்காகவே ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றது. அதற்கு சம்பளம் ரூபாய் 1.4 லட்சம் வரை தரப்படுகிறது.
தன் வாடிக்கையாளர்களுக்கு தங்கள் மெத்தையுடன் சிறந்த அனுபவத்தை கொடுக்கவேண்டும் என்பதே இதன் நோக்கம். இதில் தூங்குவதற்காக தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு தனியாக அறை, உணவு மற்றும் அணைத்து வசதிகளும் செய்து தரப்படுகிறது.
மேலும் ஒரு இரவு தூங்குவதற்கு மட்டும் சுமார் 20 லட்சம் வரை வழங்கப்படுகிறது. தூங்கிய பின்னர் அனுபவம் எப்படி இருந்தது என்று தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்.