தமிழகத்தில் பள்ளிகள் திறப்பை 4 மாதங்கள் தள்ளி வைப்பதில் தவறில்லை என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இருந்து கடலூர் செல்லும் வழியில் புதுச்சேரி மாநில எல்லையில் தேதிமுக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்திற்கு தேமுதிகவினர் வரவேற்பு அளித்தனர். அவர்களின் வரவேற்பை பெற்றுக்கொண்ட பிரேமலதா, பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்
மாணவர்களின் நலனுக்காக பள்ளிகள் திறப்பை 4 மாதங்கள் தள்ளி வைப்பதில் தவறில்லை என்றும் தெரிவித்தார்.