
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.
அமைச்சர் கே.பி.அன்பழகன் ஏற்கனவே கூறிய நிலையில் தமிழக அரசு அமைத்த குழு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது.அதில் துணை வேந்தர் சூரப்பா கூறியது போல அண்ணா பல்கலைக்கழகத்தால் தனியாக நிதி திரட்ட முடியாது என்றும் ஏற்கனவே நிதி பற்றாக்குறையில் அண்ணா பல்கலைக்கழகம் இருப்பதாகவும் தமிழக குழு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக உலக தரவரிசை பட்டியலில் இடம்பெறும் வகையில் அண்ணா பல்கலைக் கழகத்திற்குச் சிறப்பு அந்தஸ்து வழங்க மத்திய அரசு முடிவு செய்து 5 ஆண்டுகள் ஆகிறது. இதற்கு கல்வியாளர்கள் போர்க்கொடி உயர்த்தினர். அண்ணா பல்கலைக்கழகம் மத்திய அரசின் வசம் சென்றால், ஏழை மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என கல்வியாளர்கள் கருதுகின்றனர்.

இருப்பினும் இதை உடனடியாக செயல்படுத்தத் துணை வேந்தர் சூரப்பா தமிழக அரசை மீறி மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். இதையடுத்து இந்த விவாகரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் படி அமைச்சர் கே.பி.அன்பழகன், “அண்ணா பல்கலைக் கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வேண்டாம் என அரசு முடிவு செய்திருப்பதாகவும் சிறப்பு அந்தஸ்து வந்தால் மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு, கூடுதல் கல்விக்கட்டணம் வர வாய்ப்பு நேரிடும்” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.