ஆயுள் சான்றிதழ்!
பென்சன் பெறுபவர்கள் அவர்களது ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பது அவசியமாகும். ஓய்வூதியம் பெறுபவர்கள் தங்களது ஓய்வூதியத்தைத் தொடர்ந்து பெறுவதற்கு நவம்பர் மாதத்துக்குள் ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும் என்ற விதிமுறை நடைமுறையில் இருந்து வந்தது. இந்நிலையில், ஓய்வூதியம் பெறும் மூத்த குடிமக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிப்பதற்கான கால வரம்பை மத்திய அரசு தளர்த்தது. இனி மத்திய அரசின் அனைத்து ஓய்வூதியதாரர்களும் 2020 நவம்பர் 1ஆம் தேதி முதல் 2020 டிசம்பர் 31ஆம் தேதி வரையில் தங்களது ஆயுள் சான்றிதழைத் தாக்கல் செய்யலாம்.
ஆன்லைன் மூலமாக சமர்ப்பிக்கலாம்!
டிஜிட்டல் முறையில் ஆயுள் சான்றிதழ் பெறுவதற்கு விண்ணப்பதாரரிடம் ஆதார் நம்பர், மொபைல் நம்பர் இருக்க வேண்டும்.
ஜீவன் பிரமான் (Jeevan Pramaan) செயலியைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
new registration என்பதில் சென்று ஆதார் எண், வங்கிக் கணக்கு எண், பெயர், மொபைல் எண், பென்சன் பேமெண்ட் ஆர்டர் (PPO) ஆகிய விவரங்களைப் பதிவுசெய்ய வேண்டும்.
‘Send OTP’ என்பதை கிளிக் செய்தால் மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும். அதைப் பதிவிட்டு submit கொடுக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?
ஜீவன் பிரமான் செயலியில் ஓடிபி எண் மூலம் லாக் இன் செய்ய வேண்டும்.
'Generate Jeevan Pramaan' என்பதைத் தேர்ந்தெடுத்து ஆதார் எண், மொபைல் எண் ஆகிய விவரங்களைப் பதிவிடவும்.
’generate OTP’ என்பதை கிளிக் செய்தால் உங்களது மொபைல் எண்ணுக்கு ஓடிபி எண் வரும். அதைப் பதிவிடவும்.
PPO எண், பெயர், பென்சன் கொடுக்கும் ஏஜென்சியின் பெயர் போன்ற விவரங்களைப் பதிவிட வேண்டும்.
ஆதார் விவரங்களை வைத்து கை ரேகை ஸ்கேன் செய்தால் ஜீவன் பிரமான் பத்திரம் திரையில் தோன்றும். ஆயுள் சான்றிதழ் கிடைப்பது குறித்த உறுதிப்படுத்தும் செய்தி மொபைல் எண்ணுக்கு எஸ்எம்எஸ்ஸாக வரும்.








