தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோர்களிடம் இன்று கருத்துக் கேட்பு நடைபெறவுள்ளது .
தமிழகத்தில் வரும் 16 ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எம்.பி ரவிக்குமார, சீமான் உள்ளிட்ட பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இதையடுத்து தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து வரும் 9ஆம் தேதி 12 ஆயிரம் பள்ளிகளில் கருத்துக்கேட்பு நடக்கும் என அரசு அறிவித்தது.
இந்நிலையில் பள்ளி தலைமையாசிரியர் தலைமையில் நடக்கும் கருத்து கேட்பு இன்று நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் பெற்றோர்கள் கலந்துகொண்டு கருத்துகளை கூறவுள்ளனர் . 3 ஆயிரம் உயர்நிலைப்பள்ளிகள், 3 ஆயிரம் மேல்நிலைப் பள்ளிகள், 6 ஆயிரம் தனியார், சிபிஎஸ்இ பள்ளிகளில் கருத்து கேட்பு நடைபெற உள்ளது. 9ம் தேதி மாலை கருத்து கேட்பு அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நவம்பர் 16-ஆம் தேதி பள்ளிகளை திறக்கவுள்ள நிலையில் சென்னையில் 700 தனியார், அரசு பள்ளிகளில் கருத்து கேட்கப்படுகிறது.
இந்த கூட்டத்தின் முடிவில் எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில் தமிழக அரசு, பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.