
உலகத்தில் முக்கியமான சிந்தனையாளர்களின் புத்தகங்களும், ஆய்வு மற்றும் வரலாற்று புத்தகங்களும் மெயின் ஸ்டிரீம் சிந்தனையோடு ஒட்டாத பொழுது அவற்றை படிக்கும் பொழுது தூக்கம் வருவது இயர்க்கையே. அப்படி பட்ட புத்தகங்களை நமக்கானது அல்ல என்றும் சரியானது அல்ல என்றும் தூக்கி போடுவது அறிவு நாணயமற்ற செயல். புத்தகம் வாசிப்போரை வாசிக்க விரும்பாதவரிடமிருந்து வேறு படுத்துவது மெயின் ஸ்டிரீமில் இல்லாத விடயங்களை அறிவதும் அதில் உள்ளவற்றை கேள்விக்கு உட்படுத்துவதுமே. அந்த தன்மை எவருக்கும் புத்தகம் வாசிக்க ஆரம்பிக்கும் பொழுது வராது. அப்படி இருக்க அந்த சிந்தனைகளை கற்றரிய ஆர்வம் இழப்பதும் தூக்கம் வருவதும் இயற்கையே. நான் நாண்கு ஆண்டு காலமாக புத்தகங்கள் வாசிக்கிரேன் self help தவிர அனைத்து விதமான புத்தகங்களும் வாசிப்பேன். எனக்கு பொருளாதாரம், வரலாறு, அரசியல் மானுடவியல் போன்று சமூக அறிவியல் புத்தகங்கள் வாசிக்க பிடிக்கும்.
இருந்தும் இந்த பிரச்சனை எனக்கும் உள்ளது.
அதை நான் சரி செய்ய என்ன செய்வேன் என்பதை விளக்கும் பதிவு இது.
நான் காபி குடிப்பேன் அதனால் புத்தகம் வாசிக்கும் பொழுது பிளாஸ்கில் பிளாக் காபி வைத்துக் கொள்வேன். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை எழுந்து வேகமாக நடப்பேன். வீட்டில் இருக்கும் பட்சத்தில் ஒர்கவுட் செய்வேன் (push ups and crunches) தூக்கம் வரும் வேளையில். அப்படி செய்யும் பொழுது உங்கள் மூளையில் உள்ள neurotransmitters நன்கு வேளை செய்து கவனம் சிதற விடாமல் பார்த்துக் கொள்ளும். யூடியுபில் ஸ்டடி மியுசிக் உள்ளது அதை கம்மியான சத்தத்தில் வைத்து ஹெட்செட்டில் பிளே செய்து வாசிக்கலாம். நான் பரிந்துரைப்பது Pomodoro technique music.
புத்தகங்களை மாறி மாறி வாசிப்பதும் சுறுசுறுப்பை தரும். உதாரணமாக நான் ஒரு வரலாறு புத்தகம் படித்தால் அதில் ஒரு சாப்டர் வாசித்த பின்பு ஒரு நாவலில் ஒரு சாப்டர் அல்லது செய்தித் தாளில் ஒரு ஆர்டிக்கல் வாசிப்பேன். அந்த நாவலில் படிப்பது தற்காலிகமாக மறந்தாலும் அடுத்த சாப்டர் படிக்கும் பொழுது தொடர்ச்சி புரியும்.
இவற்றில் உங்களுக்கு விருப்பபட்டதை முயற்சி செய்து தூக்கம் வந்தாலும் வாசிப்பை நேசிப்போம்.








