சென்னை ஐ.ஐ.டி.யில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுதை அடுத்து, அனைத்து துறைகளையும் மூட உத்தரவிட்டப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், அரசு, மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக, தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளது.இந்நிலையில் சென்னை ஐஐடி திறக்கப்பட்டது. வழக்கம் போல் மாணவர்கள் வகுப்புகளுக்கு தொடர்ந்து வந்தனர் இந்நிலையில், 66 மாணவர்கள், 5 ஊழியர்கள் என மொத்தம் 71 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து சென்னை ஐ.ஐ.டி.யில் அனைத்து துறைகளையும் மூட ஐஐடி தலைமை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஐஐடி விடுதிகளில் தங்கியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய ஐஐடி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
குறிப்பாக, சென்னை ஐஐடியில் படித்துவரும் ஆராய்ச்சி மாணவர்கள் அனைாவரும் ஆன்-லைன் வழியில் படிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை அனைத்து துறைகளும் மூடவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.








