தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலில் ஈடுபடும் அனைத்து அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் 100% விழுக்காடு வாக்களித்த பின்னரே வாக்கு சாவடி மையங்களுக்கு பணி வழங்க வேண்டும் - அருணன் - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலில் ஈடுபடும் அனைத்து அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் 100% விழுக்காடு வாக்களித்த பின்னரே வாக்கு சாவடி மையங்களுக்கு பணி வழங்க வேண்டும் - அருணன்

 பத்திரிகை மற்றும் ஊடக செய்தி  
11.03.2021
~~~


 தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலில் ஈடுபடும் அனைத்து அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் 100% விழுக்காடு வாக்களித்த பின்னரே வாக்கு சாவடி மையங்களுக்கு பணி வழங்க வேண்டும் - சா.அருணன் - தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வலியுறுத்தல்
~~
வருகின்ற ஏப்ரல் 6ம் தேதி தமிழ்க சட்டமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ளது தேர்தல் பணியில் ஈடுப்படுத்துவது வழக்கம், ஒவ்வொருமுறையும் மூன்று பயிற்சி வகுப்புகள் நடத்தி அதன் பிறகு வாக்கச்சாவடி மையத்திற்கு பணி வழங்குவார்கள் , இதன் இடையே அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் வாக்களிக்க எந்த ஒரு தேர்தல் ஆனாலும் சரியான முறையில் வசதிகள் ஏற்படுத்தி தருவதில்லை ,  

இதன் காரணமாக மேனிலைப்பள்ளி உயர்நிலைப.பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின சார்பில்  உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது , உயர்நீதிமன்றம் தேர்தலில் ஈடுப்படும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு கால அவகாசம் அளித்து  அனைவரும் 100% விழுக்காடு வாக்களிப்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது இதனை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வரவேற்கின்றோம்

உயர்நீதிமன்ற உத்தரவை பின்பற்றி  தேர்தல் பணியில் ஈடுப்படும் அனைவரும் வாக்களிக்க வேண்டுமானால் தேர்தல் பயிற்சி நடத்தும் அலுவலரே சான்றொப்பமிட்டு படிவத்துடன் தபால் வாக்கு சீட்டு வழங்கி சுய கையோப்பம் பெற்று வாக்களிக்க வழிவகை செய்ய வேண்டும் அப்படி செய்தால் மட்டுமே உயர்நீதிமன்றம் உத்தரவிட்டபடி தேர்தல் பணி செய்யும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் காவல்துறையினர் 100% விழுக்காடு வாக்களிப்பதை உறுதி செய்ய முடியும்

ஏற்கனவே நடைமுறையில்  உள்ளபடி படிவம் 12 டியில் சான்றொப்பமிடும் அலுவலர் கையொப்பம் பெற்று தான் வாக்களிக்க வேண்டும் என்றால் 100% விழுக்காடு வாக்களிக்க இயலாத இயலாத நிலை ஏற்படும் , சான்றொப்பம் பெற அலைக்கழிக்க படுவதாலேயே தேர்தல் பணி செய்யும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் பெரும்பாலனோர் வாக்களிப்பதில்லை ஆகையால் பழைய விதியை மாற்றி பயிற்சி வகுப்பு நடத்தும் அலுவலரே முன்கூட்டியே கையொப்பமிட்ட படிவத்தை பூர்த்தி செய்து வாக்களிக்கும் பணியாளர்கள் சுய கையொப்பமே போதுமானது என தேர்தல் ஆணையம் அறிவித்து இண்டாம் கட்ட பயிற்சியில் வாக்களிக்கும் விதமாக அவர்கள் பணி செய்யும் இடத்திற்கே படிவங்களை வழங்க வேண்டும் மூன்றாம் கட்ட பயிற்சியின்போது 100% விழுக்காடு உயர்நீதி மன்றம் அறிவுறுத்தல் படி அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் வாக்களித்தை உறுதி செய்ய வேண்டும்

மேலும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஒரே தொகுதியில் அவர்கள் பணி செய்யும் இடம் மற்றும் வசிப்பிடத்தின் பக்கத்தில் உள்ள மாநகராட்சி பகுதி ஊராட்சி ஒன்றியம் மற்றும் நகராட்சிகளில் பணி வழங்க வேண்டும் ஏனென்றால் தேர்தல் பணி செய்யோர் பெரும்பாலானோர் பெண்கள் இரண்டு இரவு தங்கி பணி செய்ய வேண்டும் தேர்தல் ஆணையம் இதனையும் பரிசீலனை செய்து உதவிட வேண்டும்

தேர்தல் பணியில் மாற்றுத்திறன் ஊழியர்கள் ஆசிரியர்கள் , மகப்பேறு ஊழியர்கள் ஆசிரியைகள் , காசநோய், புற்றுநோய் , மூச்சி திணறல் பிரச்சனை , இருதய பிரச்சனை உட்பட கடினமான நோய் உள்ள ஆசிரியர்கள் அரசு ஊழியர்களை பணியமர்த்தக் கூடாது அவர்களுக்கு தேர்தல் பணியில் இருந்து முற்றிலுமாக விளக்களிக்க வேண்டும்

அதேபோன்று தேர்தல் பணி செய்யும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் காவல்துறையினருக்கு அனைத்து வசதிகளையும் உறுதிப்படுத்த வேண்டும் குறிப்பாக வாக்குச்சாவடி மைங்களி்ல் பணிபுரிபவர்களுக்கு குடிநீர் வசதி குளிர்பதற்கு தண்ணீர் வசதி, கழிப்பிட வசதி  உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகளை ஏற்பாடுத்தித்தர  வேண்டும்,  சிற்றுண்டி, மதிய உணவு இரவு உணவு பற்றாக்குறை இன்றி ஏற்பாடு செய்ய வேண்டும்

மேற்கண்ட வசதிகளை   தமிழக தலைமை தேர்தல் ஆணையர் அவர்கள் செய்து உதவி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்
~~~
சா.அருணன்
நிறுவனத் தலைவர்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு
9445454044



Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H