தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு திறனறித்தேர்வு நடத்த தனியார் பள்ளிகள் முடிவு செய்துள்ளன.
நடப்பு கல்வியாண்டில் 9, 10, மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவ மாணவிகள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனால் தனியார் பள்ளிகளில் பத்தாம் வகுப்பில் இருந்து 11ஆம் வகுப்பு செல்லும் மாணவர்களுக்கு எந்த அடிப்படையில் பாடப்பிரிவுகளை பிரித்துக் கொடுப்பது என்பதில் குழப்பம் ஏற்பட்டது.
அதனை தவிர்ப்பதற்காக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள 350 தனியார் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் ஏப்ரல் மாதம் சட்டமன்றத் தேர்தல் நிறைவடைந்ததும் திறனறித்தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...