திமிங்கலம் எடுத்த வாந்தியால் பெண் ஒருவர் கோடீஸ்வரியாக மாறியுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்து நாட்டைச் சார்ந்தவர் நியார்மிரின்(49). இந்நிலையில் சம்பவத்தன்று கனமழை பெய்துள்ளதுள்ளது . பின்னர் மழை நின்றதையடுத்து அவர் கடற்கரை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தபோது கடற்கரையில் ஏதோ மிதந்து கொண்டிருப்பது போல தெரிந்ததுள்ளது. உடனே அங்கு சென்று பார்த்த அவர் பந்து போன்ற இருந்த அதை தூக்கிக் கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் அதை அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் காட்டியுள்ளார். அவர்கள் அதை திமிங்கலம் எடுத்த வாந்தி அதாவது Ambergris என்று கூறியுள்ளனர். மேலும் இதனுடைய மதிப்பு சுமார் 2 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.
இது திமிங்கலம் மீன்களை விழுங்கும் போது அதில் சில மீன்கள் செமிக்காமல் வயிற்றில் அப்படியே தங்கிவிடும். சில காலங்கள் கழித்து திமிங்கலம் அதை வாந்தியாக வெளியே எடுக்கும்போது மிகப்பெரிய அளவில் பந்துபோல வெளியே வந்து விழும். இது வாசனை திரவியங்கள் செய்ய பயன்படுகிறது. மேலும் இது அதிக விலை மதிப்புடையது ஆகும். இதை சூடுபடுத்தும் போது உருகி மீண்டும் கடினமாகி ஒரு வாசனை வரும். இதையடுத்து நியார்மிரின் வீட்டில் சென்று அதிகாரிகள் சோதனை செய்த உள்ளதாகவும், இது தனக்கு பெரிய அதிர்ஷ்டம் என்றும் அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...