10 ஆண்டுகளாக அதிமுக அரசு
முடக்கி
வைத்த கணினி அறிவியல் பாடப்புத்தகத்தை மீண்டும் நடைமுறை படுத்த
பி.எட்., கணினி அறிவியல்
வேலையில்லா பட்டதாரி சங்கம் கோரிக்கை
தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல்
வேலையில்லா
பட்டதாரி சங்க பொதுச் செயலாளர், வெ.குமரேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாடு பாடநூல் கழகத்திற்கு தலைவராக பொறுப்பேற்றுள்ள ஐ. லியோனி
அவர்களுக்கு கணினி ஆசிரியர் சங்கத்தின் சார்பாக நெஞ்சார்ந்த
வாழ்த்துக்கள்..
முதன்
முதலாக சமச்சீர் கல்வியில்2011ம் ஆண்டில் கணினி அறிவியல் பாடத்தை
6ம்வகுப்பிருந்து அறிமுகம் செய்தவர் முன்னாள் முதல்வர் கலைஞர். ஆட்சி
மாற்றத்திற்கு பின், கணினி கல்வியை 10 ஆண்டுகளாக முடக்கி வைத்துள்ளது
அதிமுக அரசு. கலைஞர் தந்த கணினி அறிவியல் பாடப்புத்தகத்தை மீண்டும்
நடைமுறை படுத்த வேண்டுகிறோம்.
கணினி
அறிவியல் பாட புத்தகம் பல கோடி செலவில் அச்சிடப்பட்டு மாணவர்களுக்கு
பயன்படாத வண்ணம் இன்று வரை கடந்த 10 ஆண்டுகள் முடக்கப்பட்டு அதனை குப்பைக்
கிடங்குகளில் போடப்பட்டுள்ளது .இதனை அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெறும்
வண்ணம் வழங்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.