கொரோனா பெருந்தோற்று பரவல் காரணமாக 1 முதல் 8 - ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி / இழப்பையும் சரிசெய்யும் விதமாக தன்னார்வலர்களை கொண்டு குறைதீர் கற்றல் செயல்பாடுகள் மேற்கொள்ள " இல்லம் தேடிக் கல்வி " என்ற திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது . இத்திட்டத்திற்காக பணியாற்றவுள்ள தன்னார்வலர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சியில் கருத்தாளர்களாக செயல்பட அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் EMIS இணையதளத்தில் அவர்களுடைய staff login- ல் உள்ள ITK RP's option- ஐ பயன்படுத்தி , தங்கள் விருப்பம் மற்றும் விருப்பமின்மைக்கான விவரத்தினை தவறாமல் 28.10.2021 - க்குள் பதிவிட வேண்டும்.
இத்தகவலை அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் தெரிவித்து உரிய விவரங்களை பதிவேற்றம் செய்ய அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...