பன்னாள் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியருக்கும், அவரிடம் படித்த மாணவருக்கும் ஒரே மேடையில் நிகழாண்டுக்கான தமிழக அரசின் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது.
கணித பாடத்தை எளிமையாக கற்றுத் தந்து, சிறப்பாக பணியாற்றியதற்காக மோகனசுந்தரத்துக்கு 2022-ம் ஆண்டுக்கான மாநில நல்லாசிரியர் விருதை செப்.5-ம் தேதி தமிழக அரசு வழங்கி கவுரவித்தது.
நல்லாசிரியர் சான்றிதழுடன் அரசு வழங்கிய ரூ.10 ஆயிரத்துக்கான காசோலையை மோகனசுந்தரம் தான் பணியாற்றி வரும் பள்ளி நிதிக்காக வழங்கியுள்ளார்.
இதேபோல, மோகனசுந்தரத்தின் மாணவரான கோகூர் உயர்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வரும் பன்னாள் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்(35) என்பவருக்கும் தமிழக அரசின் 2022-ம் ஆண்டுக்கான நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது.
இவர், மாணவர்களின் பன்முகத் திறனை வெளிப்படுத்தும் வகையில் கல்வி கற்பித்து வருவதால் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
ஒரே கிராமத்தில் வசிக்கும் ஆசிரியர் மோகனசுந்தரத்துக்கும், அவரது மாணவரான ஆசிரியர் சதீஷுக்கும் சென்னையில் செப்.5-ம் தேதி நடைபெற்ற விழாவில், ஒரே மேடையில் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.
என்னுடன் சேர்ந்து எனது மாணவரும் நல்லாசிரியர் விருது பெற்றது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
இதுகுறித்து ஆசிரியர் சதீஷ் கூறியபோது, “என் ஆசானுடன் சேர்ந்து எனக்கு விருது அறிவித்ததை முதலில் என்னால் நம்ப முடியவில்லை. எனக்கு நல்லாசிரியர் விருது கிடைத்ததைவிட, என் ஆசானுடன் சேர்ந்து கிடைத்திருப்பது என் வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்ச்சியாக அமைந்தது” என்றார்.