தமிழகத்தில், அக்டோபர் 24 ல், தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில், அதற்கு அடுத்த நாளான 25ம் தேதியை பள்ளிகளுக்கு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என, கோரிக்கை குவிந்து வருகிறது.
பள்ளிகளில் விடுமுறை:
தமிழகத்தில் வருகிற அக்டோபர் 24 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்கு இன்னும் 6 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், பொதுமக்கள் அனைவரும் தீவிரமாக அதற்கு தயாராகி வருகின்றனர். இந்த நிலையில், அக்.24 அன்று திங்கட்கிழமை என்பதால் அன்று மட்டும் அரசு விடுமுறை தினமாக அறிவித்துள்ளது.
ஆனால், வெளியூர்களில் தங்கி இருக்கும் பலர் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி பண்டிகையை கொண்டாடி விட்டு, அடுத்த நாள் அவசர அவசரமாக திரும்ப வேண்டி உள்ளது. இந்த அவசரகதியில் மாணவர்களை, தீபாவளிக்கு அடுத்த நாளே பள்ளிகளுக்கு அனுப்புவது சற்று சிரமமான காரியம்.
இதனை கருத்தில் கொண்டு, தீபாவளிக்கு அடுத்த நாளான, அக்டோபர் 25 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என பெற்றோர்கள் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு கட்ட ஏதாவது ஒரு சனிக்கிழமை, பள்ளிகளை முழு நேரமாக இயங்க வைக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர். விரைவில் இது குறித்த கோரிக்கையை பரிசீலித்து அரசு தனது முடிவை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.