Domestic Violence Act: குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் 2005ன் படி பாதுகாப்பு அலுவலர் நியமிக்கப்பட வேண்டும்.
அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் சமூக
நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் சமூக நல அலுவலகத்தில் ஓராண்டு
தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிய பாதுகாப்பு அலுவலர் தேர்வு செய்யப்பட
உள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி: M.A. Sociology/ Social Work / psychology with Computer knowledge
வயது வரம்பு : பொது பிரிவினருக்கு அதிகபட்சமாக 30 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இடஒதுக்கீட்டு பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
பட்டியல் இனத்தவர் | பட்டியல் பழங்குடியினர் | மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் | பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் | பொது பிரிவினர் (பொது போட்டி ) | |
குறைந்தபட்சம் | 22 | 22 | 22 | 22 | 22 |
அதிகபட்சம் | 35 | 35 | 32 | 32 | 30 |
விண்ணப்பிக்க விருப்பமுள்ள தகுதியான நபர்கள் https://salem.nic.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றுகளுடன், "மாவட்ட சமூக நல அலுவலகம் மாவட்ட ஆட்சியர் வளாகம், அறை எண் 126" என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும்.
05.11.2022 அன்று மாலை 6.00 மணிக்குள் வரும் விண்ணப்பங்களை பரிசீலித்து தகுதியான நபர்களுக்கு மட்டுமே நேர்காணலுக்கு அழைப்பு அனுப்பப்படும். மேலும் விவரங்களுக்கு 0427-2413213 என்ற மாவட்ட சமூக நல அலுவலக தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.