தற்போது, 122 ஓட்டுநர் பணியிடங்களையும், 685 ஓட்டுநர் மற்றும் நடத்துனர் (driver cum conductor) பணியிடங்களையும் நிரப்ப தமிழ்நாடு அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டது.
இந்த பணியிடங்களை நிரப்பவுதற்கான அறிவிப்பு இரண்டு முன்னணி செய்தி தாளில் வெளியிடப்பட வேண்டும் என்றும், விண்ணப்பங்கள் இணைய வழியில் மூலம் மட்டுமே பெறப்பட வேண்டும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரசு போக்குவரத்துக் கழகம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து தகுதியான நபர்களின் பட்டியலை பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னுரிமை:
a. கல்வித் தகுதி, வயது, சாதி சான்றிதழ், ஓட்டுநர் உரிமம், ஓட்டுநர் மற்றும் நடத்துனர் உரிமம், ஓட்டுநர் தகுதித் திறன், ஓட்டுநர் மற்றும் நடத்துனர் தகுதித் திறன்
b. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதவி செய்தவர்கள்
ஆகிய இரண்டின் அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.









