தமிழ்நாடு சமூக நலத்துறை இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசிய திட்டம்(Indira Gandhi National Old Age Pension Scheme) , இந்திரா காந்தி மாற்றுத் திறனுடையோர் ஓய்வூதியத் திட்டம் (Indira Gandhi National Disability Pension Scheme) இந்திரா காந்தி விதவையர் ஓய்வூதிய தேசியத் திட்டம்(Indira Gandhi National Widow Pension Scheme) , கணவனால் கைவிடப்பட்ட, ஆதரவற்ற பெண்கள் ஓய்வூதியத் திட்டம்(Destitute / Deserted Wives Pension Scheme), மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியத் தொகை திட்டம்(Differently Abled Pension Scheme), திருமணமாகாத ஏழை பெண்களுக்கான ஓய்வூதியத் திட்டம் (Un-married Women Pension Scheme), ஆதரவற்ற விதவையர் ஓய்வூதியத் திட்டம் (Destitute Widow Pension Scheme) இலங்கை மக்களுக்கான ஓய்வூதியத் திட்டம் (Srilankan Pension Schemes) உள்ளிட்ட பல்வேறு ஓய்வூதியத் திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
முதியவர் ஓய்வூதியம் திட்டம்:
முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், 60 வயதும் அதற்கு மேலும் வயது முதிர்ந்த ஆதரவற்ற ஆண் / பெண் ஆகிய இருவரும் விண்ணப்பிக்கலாம். 60 வயது முதல் 79 வயது வரையிலான பயனர்களுக்கு மத்திய அரசு ரூ.200, மாநில அரசு, ரூ.800 என்ற விகிதாச்சாரத்தில் ரூ. 1000ஐ வழங்கி வருகிறது. அதேபோன்று, 80 மற்றும் அதற்கு மேல் உள்ள பயனாளிகளுக்கு மத்திய அரசு ரூ.500-ம், மாநில அரசு - ரூ.500 என்ற விகிதாச்சாரத்தில் ரூ. 1000-ஐ வழங்கிவருகிறது.
திட்டத்தின் முக்கிய சவால்கள்:
- மாநிலத்தில் உள்ள மூத்த குடிமக்களில் வெறும் 30% பேர் மட்டுமே முதயோர் ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிக்கின்றனர். இதில், 16% மட்டுமே ஓய்வூதியத் தொகையை பெறுகின்றனர் ( Tamil Nadu J-PAL Survey).
- இந்த திட்டத்தைப் பற்றிய போதுமான விழிப்புணர்வு மூத்த குடிமக்களிடம் இல்லை.
- குறிப்பாக, தகுதியான விண்ணப்பபதாரர்கள் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்வதில்லை.
தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள்: 2011ம் ஆண்டு சமூக பொருளாதார கணக்கெடுப்பின் படி, தகுதியான பயனாளர்களை தமிழ்நாடு அரசு தற்போது அடையாளம் கண்டு வருகிறது. இருப்பினும், இந்த முயற்சியில் பல்வேறு முரண்கள் காணப்படுவதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குற்றஞ்சாட்டியிருந்தார்.









