திண்டுக்கல்
அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலில் காலியாக உள்ள தட்டச்சர், நூலகர்,
கணினி பொறியாளர், ஓட்டுநர், நடத்துனர், ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு
துறைகளின் கீழும் 281 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
விண்ணப்பிக்க கடைசி நாள் 07.04.2023 பிற்பகல் 5.45 மணி ஆகும். இந்த
பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், இறை நம்பிக்கை
உடையவராகவும் இந்து மதத்தைச் சேர்ந்தவராகவும் இருத்தல் வேண்டும்.

01.07.2022 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 45 வயதிற்கு
உட்பட்டவராகவும் விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட
விண்ணப்பங்களை, "இணை ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி
திருக்கோயில், பழனி, திண்டுக்கல் மாவட்டம் -624 601" என்ற முகவரிக்கு
நேரிலோ/ அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும். மேலும் ரூ.25/- மதிப்புள்ள
அஞ்சல் தலையை ஒட்டி சுயவிலாசமிட்ட ஒப்புகை அட்டையுடனும் அஞ்சல் உறையுடனும்
இணைத்து அனுப்ப வேண்டும்.
தேர்வு முறையானது அடிப்படை கல்வித் தகுதி, அனுபவம், செயல்முறை தேர்வுகள்
கூடுதல் தகுதி மற்றும் நேர்முக தேர்வு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள்
அடிப்படையில் நடைபெறும்.
விண்ணப்பதாரர்களால் வழங்கப்படும் சான்றுகள் அனைத்து சம்மந்தப்பட்ட துறைகளின் மூலம் பரிசீலனைக்கு உட்படுத்தப்படும்.
திருக்கோயிலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்கள், அவர்களின்
வாரிசுதாரர்கள், அரசு பணி மற்றும் பொது நிறுவனங்கள், இதர திருக்கோயில்களில்
பணிபுரிந்து தண்டனை காரணமாக தகுதியற்றவர்கள். பணி நீக்கம்
செய்யப்பட்டவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்.

விண்ணப்ப படிவத்தினை www.hrce.tn.gov.in மற்றும் www.palanimurugan.hrce.tn.gov.in என்ற திருக்கோயில் இணையதளத்திலிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது திருக்கோயில் அலுவலகத்தில் ரூ.50/- செலுத்தி விண்ணப்பத்தினை பெற்றுக்கொள்ளலாம்