ஆசிரியர்கள் மே நான்காவது வாரம் பள்ளிக்கு வருகை புரிதல் சார்பு -முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள்
தொலைநோக்குப் பார்வை(2)ன் படி, அனைத்து வகையான பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் (தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலை) கூடுதல் மாநில திட்ட இயக்குனர் - 2 ஆல் பள்ளி செல்லா குழந்தைகள் குடியிருப்பு வாரியாக கள ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மே மாதம் நான்காவது வாரத்தில் கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும்.
எனவே, தொடக்க/நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கணக்கெடுக்கும் பணியிலும், உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுவதை மாவட்ட கல்வி அலுவலர்கள் (தொடக்க, மேல்நிலை), மாவட்ட கல்வி அலுவலர்கள் (தனியார் பள்ளிகள்) கண்காணித்து உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.