தொலைந்த மற்றும் திருடப்பட்ட செல்போன்களை மீட்க புதிய வசதியை மே 17ஆம் தேதி முதல் மத்திய அரசு அமலுக்குக் கொண்டு வரவுள்ளது.
CEIR என்ற தொழில்நுட்ப அமைப்பின் மூலம் இச்சேவை செயல்பாட்டுக்கு
வரவுள்ளது. இந்த சேவையில் தொலைந்த செல்போன்களின் செயல்பாட்டை முடக்கி,
அவற்றை டிராக் செய்து காவல்துறையினர் உதவியுடன் செல்போன்களை பயனர்கள் மீட்க
முடியும்.
செல்போன் திருட்டை குறைக்கவும், புகாரளிப்பதை எளிதாக்கி மொபைல்களை விரைவாக மீட்கும் நோக்கிலும் இந்த வசதி அமலாக உள்ளது.
CEIR
இணைய சேவை மூலமாக செல்போன்களை மீட்க, புகாரளித்த எஃப்.ஐ.ஆர் நகலை பயனர்கள்
பதிவிட வேண்டும். அதேபோல செல்போனின் மாடல், IMEI எண்கள், திருடப்பட்ட
இடம், செல்போன் எண் உள்ளிட்டவற்றை பதிவிட வேண்டும்.
தகவல் சரியாக இருக்கும் பட்சத்தில் 24 மணி நேரத்துக்குள் செல்போன்
முடக்கப்படும். பின்னர் அவற்றை கண்காணித்து மீட்கும் நடவடிக்கைகள் தொடரும்.
மீட்ட பின்னர் பயனர்கள் செல்போனை அன்பிளாக் செய்து வழக்கம் போல
பயன்படுத்தலாம்.