திருமலைக்கு செல்லும் ஸ்ரீவாரி பக்தர்களுக்கு தரிசன டிக்கெட்டுகள் அவ்வளவு எளிதாக கிடைப்பதில்லை.
சிறப்பு தரிசனம் மற்றும் சேவை டிக்கெட்டுகளை ஒன்று அல்லது இரண்டு
மாதங்களுக்கு முன்பே பதிவு செய்ய வேண்டும். இலவச தரிசனத்திற்கு செல்ல ஒரு
நாள் முழுவதும் வரிசையில் நிற்க வேண்டும். மேலும் 300 ரூபாய் தரிசன
டிக்கெட் இல்லாதவர்கள் ரொம்பவே கஷ்டப்படுவார்கள். அப்படி கஷ்டப்படாமல்
மணிக்கணக்கில் வரிசையில் காத்திருக்காமல் எளிமையாக தரிசனம் செய்ய என்ன
செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.
திருப்பதி செல்லும் பக்தர்கள் ஓரிரு மாதங்களுக்கு முன்பே டிக்கெட்
முன்பதிவு செய்து விடுகின்றனர். ஆன்லைனில் போட்ட சில நிமிடங்களில் விற்று
தீர்ந்துவிடும். இந்த டிக்கெட்டுகளை பெற முடியாதவர்கள் திருமலைக்குச்
சென்று நேர ஸ்லாட் சர்வ தரிசன டிக்கெட்டுகளையும் நேரடியாகப் பெறலாம். ஆனால்
இதற்கும் ஐந்து முதல் ஆறு மணி நேரம் ஆகும்.
ஆனால் எந்த சிரமமும் இல்லாமல்... எளிதாகவும் விரைவாகவும் திருமலை
ஏழுமலையானை தரிசிக்க வழி இருக்கிறது. ஆர்டிசி பஸ்களில் திருப்பதி
சென்றால்.. பஸ் டிக்கெட்டுடன் ஏழுமலையானை தரிசிக்கும் தரிசன
டிக்கெட்டுகளும் கிடைக்கும். APSRTC ( Andhra Pradesh State Road Transport
Corporation) உடன் TSRTC ( Telangana State Road Transport Corporation)
யும் இந்த டிக்கெட்டுகளை வழங்குகிறது.
தெலங்கானாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருப்பதிக்கு TSRTC
பேருந்துகளை இயக்குகிறது. அதில், தினமும் 1000 பயணிகளுக்கு ரூ.300 விரைவு
தரிசன டிக்கெட்டுகள் கிடைக்கும். பக்தர்கள் இந்த வசதியை பயன்படுத்திக்
கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
திருப்பதி பாலாஜி இணையதளம் அல்லது TT தேவஸ்தானம் செயலி மூலம் ரூ.300
சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை பெற வேண்டுமானால், ஒரு மாதம் அல்லது இரண்டு
மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய வேண்டும். TSRTC (Telangana State
Road Transport Corporation) மூலம் பெற வேண்டுமானால் ஐந்து அல்லது ஆறு
நாட்களுக்கு முன் பதிவு செய்தால் போதுமானது.
பக்தர்களுக்காக திருப்பதிக்கு வசதியான பேருந்துகளை இயக்குவதாக TSRTC
தெரிவித்துள்ளது. திருமலை செல்லும் பக்தர்கள்.. ஆர்டிசி டிக்கெட் ரூ.300
ஸ்ரீவாரி சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளை ஒரே நேரத்தில்
www.tsrtconline.in என்ற இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம்..
இதனிடையே நேற்று முன்தினம் மட்டும் 70,366 பக்தர்கள் திருப்பதி ஏழுமலையானை
தரிசனம் செய்தனர். பக்தர்களின் காணிக்கையாக ரூ.4.32 கோடி வருவாய்
கிடைத்துள்ளது.