ஏப்ரல் 21-ல் அஞ்சல் உதவியாளர், அஞ்சல் பிரிப்பு உதவியாளர் தேர்வு:
அஞ்சல் உதவியாளர், அஞ்சல் பிரிப்பு உதவியாளர் தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகள் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழக அஞ்சல் துறையில் உள்ள அஞ்சல்
உதவியாளர், அஞ்சல் பிரிப்பு உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை
குறித்த அறிவிப்பு, கடந்த ஆகஸ்டு மாதம் வெளியிடப்பட்டு,
விண்ணப்பங்கள்
பெறப்பட்டன. விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியுள்ள
விண்ணப்பதாரர்களின் பட்டியல், www.indiapost.gov.in என்ற இணைய தளத்தில்
வெளியிடப்பட்டுள்ளன.
இதற்கான தேர்வு ஏப்ரல் 21-ஆம் தேதி
நடைபெற உள்ளது. சென்னை, திருச்சி, மதுரை, கோவை மற்றும் புதுச்சேரி ஆகிய 5
மையங்களில் தேர்வு நடைபெறும். தேர்வுக்கான அனுமதிக் கடிதங்கள்
விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பப் பட்டுள்ளன. அனுமதிக் கடிதங்களை இணைய
தளத்திலும் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழ்நாடு அஞ்சல்துறை
தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...