இங்கிலாந்தில் ஓராண்டு முதுகலை: இந்தியாவில் தொடர் படிப்பு அவசியம்:
இங்கிலாந்திற்கு சென்று ஓராண்டு முதுகலை பட்டம் முடிக்கும் மாணவர்கள்,
இந்தியாவில் அரசு வேலை வாய்ப்பிற்கு பதிவு செய்வதற்கு முன், தொடர் (Bridge)
படிப்பை முடித்திருக்க வேண்டும் என்று எச்ஆர்டி தெரிவித்துள்ளது.
இங்கிலாந்திற்கு சென்று ஒரு வருட முதுகலை பட்டப் படிப்பு
முடித்துவிட்டு, இந்தியாவில் அரசு வேலை வாய்ப்பிற்கு பதிவு செய்யும்
மாணவர்கள் Bridge என்ற 6 மாத கால தொடர் படிப்பை கட்டாயமாக முடித்திருக்க
வேண்டும். பிரிட்ஜ் படிப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே, அரசு வேலை
வாய்ப்புக்கு அங்கீகாரம் வழங்கப்படும் என்று மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்
முடிவு செய்துள்ளது.
மேலும் இந்திய மாணவர்கள் அரசு வேலை வாய்ப்புக்கு மட்டுமின்றி தேசிய
அளவில் நடத்தப்படும் (NET) போன்ற நுழைவுத்தேர்களுக்கும் விண்ணப்பிக்க
முடியும் என்று எச்.ஆர்.டிதெரிவித்துள்ளது