அரசுப் பள்ளிகளின் கல்வித் தரத்தை அதிகரிக்கும் வகையில் வட்டார வள மையங்களை
இணைக்கும் பணியை பள்ளிக் கல்வித்துறை அதிரடி முடிவை எடுத்துள்ளது.
தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் எல்கேஜி முதல் பிளஸ் 2 வரை ஆண்டுதோறும் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்து வருகிறது. அதே சமயம் கல்வியின் தரம், கற்பிப்பு முறை, பள்ளிகளின் உள்கட்டமைப்பு காரணமாக அரசுப்பள்ளிகள் சேர்க்கை குறைந்து வருகிறது.
இதைதடுக்கும் நோக்கில், அரசுப் பள்ளிகளில் தற்போது எல்கேஜி, யுகேஜி வகுப்புகளும் தொடங்கப்பட்டும், எதிர்பார்த்த அளவுக்கு சேர்க்கை இல்லை. இதனால் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.
இந்நிலையில், பள்ளிகளின் தரத்தை உயர்த்தவும், கல்வியின் தரத்தை
உயர்த்தவும் பள்ளிக் கல்வி முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் பல்வேறு
நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். முக்கியமாக பள்ளிக் கல்வித்துறையில் உள்ள
முக்கிய அதிகாரிகளை மாற்றி அமைத்துள்ளார்.இதையடுத்து பள்ளிகளில் அதிக
அளவில் மாணவர்கள் அதிக அளவில் சேர்க்கப்பட வேண்டும் என்ற நோக்கில் பல புதிய
திட்டங்களையும் கொண்டு வந்துள்ளார். அதற்காக அனைத்து மாவட்ட முதன்மைக்
கல்வி அலுவலர்களும் மாணவர் சேர்க்கையில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள
வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் 20ம் தேதி முதல் 22ம்
தேதி வரை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி
அதிகாரிகளுக்கான சிறப்பு பயிற்சி மாமல்லபுரத்தில் நடக்க உள்ளது.தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் எல்கேஜி முதல் பிளஸ் 2 வரை ஆண்டுதோறும் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்து வருகிறது. அதே சமயம் கல்வியின் தரம், கற்பிப்பு முறை, பள்ளிகளின் உள்கட்டமைப்பு காரணமாக அரசுப்பள்ளிகள் சேர்க்கை குறைந்து வருகிறது.
இதைதடுக்கும் நோக்கில், அரசுப் பள்ளிகளில் தற்போது எல்கேஜி, யுகேஜி வகுப்புகளும் தொடங்கப்பட்டும், எதிர்பார்த்த அளவுக்கு சேர்க்கை இல்லை. இதனால் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.
இதன்படி அரசுப் பள்ளிகளில் கல்வி தரம் உயர்த்த, பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களை நேரடியாக கண்காணிக்கமுடியும். அதற்காக புதிய செயலியை உருவாக்கவும் உள்ளனர். இதனால் ஒவ்வொரு மணிநேரமும் பள்ளிகளின் நிலையை நேரடியாக கண்காணிக்க முடியும். தமிழகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் தனிப்பட்ட வகுப்பில் மாணவர்கள் வருகை, ஆசிரியர்கள் வருகையை கண்காணிக்க முடியும். அதனால் ஆசிரியர்களோ, மாணவர்களோ ஏமாற்ற முடியாது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...