தமிழகத்தில் புதியதாக பொறியல்,பாலிடெக்னிக் கல்லூரிகள் தொடங்க தமிழக அரசு உத்தரவு:
தமிழகத்தின் பல மாவட்டங்களில், பொறியியல் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக்குகள் அமைக்க, நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.தர்மபுரி மாவட்டம் செட்டிக்கரை மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி ஆகிய இடங்களில், அரசு சார்பில் புதிய பொறியியல் கல்லூரிகள் அமைக்கப்படுகின்றன. இவற்றுக்கு, ரூ.179.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன் முதற்கட்டமாக, ஒவ்வொரு கல்லூரிக்கும் தலா ரூ.14.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.இதுதவிர, மதுரை, திருச்சி, தேனி மற்றும் வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில், மொத்தம் 10 பாலிடெக்னிக்குகள் அமைக்க ரூ.13கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், வேளாண்மைத் துறையை இயந்திரமயப்படுத்தும் அரசின் முயற்சியை மேம்படுத்தும் வகையில், 300 கிராமப்புற இளைஞர்களுக்கு வேளாண் உபகரணங்கள் மற்றும் இயந்திரங்களை பயன்படுத்தல் மற்றும் பராமரித்தல் குறித்து பயிற்சியளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்காக, கோவை, மதுரை, வேலூர், திருச்சி, திருவாரூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் உள்ள வேளாண் பொறியியல் துறைகளின் டிப்போக்களில் தலா 50 இளைஞர்களுக்கு பயிற்சியளிக்க, தலா ரூ.42.90 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...