மாநில விரிவுரையாளர் தகுதித் தேர்வு: இந்த மாத இறுதிக்குள் முடிவு வெளியீடு:
மாநில விரிவுரையாளர் தகுதித் தேர்வு முடிவுகள் இந்த
மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று பாரதியார் பல்கலைக்கழக வட்டாரங்கள்
தெரிவித்தன.
விரிவுரையாளர்களுக்கான மாநில அளவிலான தேர்வை கோவையில் உள்ள பாரதியார்
பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. கடந்த அக்டோபர் 7-ம் தேதி விரிவுரையாளர்
தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. மாநிலம் முழுவதும் இந்தத் தேர்வை 51,500
பேர் எழுதினர். இந்தத் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற
எதிர்பார்ப்பு தேர்வர்களிடையே எழுந்துள்ளது.
இதுதொடர்பாக, பாரதியார் பல்கலைக்கழக வட்டாரங்கள் கூறியது:- மாநில
விரிவுரையாளர் தகுதித் தேர்வு விடைத்தாள்கள் மதிப்பீடு
செய்யப்பட்டுவிட்டன. பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிமுறைகளின் படி,
மானியக் குழு நேரில் ஆய்வு நடத்தி முடிவை வெளியிட ஒப்புதல் வழங்க வேண்டும்.
இதற்காக பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
அவர்களிடம் இருந்து இன்னும் பதில் வரவில்லை. இந்த நடைமுறை முடிந்ததும்
விரைவில் முடிவுகள் வெளியிடப்படும். பெரும்பாலும் இந்த மாத இறுதிக்குள்
மாநில விரிவுரையாளர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அந்த
வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...