+2,10 படிக்கும் மாணவர்களுக்கு(B.tech)படிக்க கல்வி உதவித் தொகை விண்ணப்பிக்க கடைசி தேதி ஜனவரி 31 ஆகும்.
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் அதிக
மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பி.டெக் படிப்பில் சேர்ந்து படிப்பதற்கான
கல்வி உதவித் தொகையை வழங்குகிறது, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள NIIT
பல்கலைக் கழகம்.
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 60
சதவீத மதிப்பெண் பெற்றவர்கள் இந்த கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
2013 ஏப்ரலில் பொதுத் தேர்வை எழுதவுள்ள மாணவர்களும் விண்ணப்பிக்க
முடியும். தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் NIIT பல்கலைக் கழகத்தில் பி.டெக்
படிப்பில் சேர்ந்து படிப்பதற்கான கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாளாக ஜனவரி 31-ம் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் தங்களைப் பதிவு செய்துகொள்ள btech@niituniversity.in என்ற
முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும். மேலதிக விவரங்களுக்கு
www.niituniversity.in என்ற இணைய தளத்தை அணுகலாம்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...