மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் தகுதி பரிசுத்தொகைக்கு- SC/ST மதம் மாறிய ஆதிதிராவிட கிருஸ்துவ மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தமிழை ஒரு பாடமாகக் கொண்டு பயின்று தொடர்ந்து கல்வி பயிலும்
ஆதிதிராவிடர், பழங்குடியினர், மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிடர் இனத்தைச்
சேர்ந்த முதல் ஆயிரம் மாணவர்கள் மற்றும் முதல் ஆயிரம் மாணவிகளுக்கு
முதல்வரின் தகுதி பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.
பிளஸ் 2 படிப்பைத் தொடர்ந்து அல்லது ஓராண்டு இடைவெளிக்குப் பின்னர்
மேல்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் ரூ.3 ஆயிரம் வீதம்
ஐந்தாண்டுகளுக்கு பரிசுத் தொகை வழங்கப்படும். மாணவர்கள், 1069
மதிப்பெண்களும், மாணவிகள் 1082 மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.
2011-12-ம் கல்வியாண்டுக்கு முந்தைய ஆண்டுகளில் முதல்வரின் தகுதி பரிசுத்
தொகையினைப் பெற்று தொடர்ந்து புதுப்பிக்கும் மாணவர்கள், அடுத்த நிதியாண்டு
முதல் (2012-2013) ரூ.3 ஆயிரம் பெறலாம்.
நடப்பாண்டு (2012) மார்ச்சில் நடைபெற்ற பொதுத் தேர்வில் அதிக
மதிப்பெண்கள் பெற்ற தகுதி வாய்ந்த மாணவர்கள் மட்டும் தங்களது பிளஸ் 2
மதிப்பெண் பட்டியல், ஜாதிச் சான்றிதழ் மற்றும் மேல்படிப்புக்கான மதிப்பெண்
பட்டியல் நகல்களுடன் தங்கள் கல்லூரி அமைந்துள்ள மாவட்டத்திலுள்ள மாவட்ட
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலருக்கு கல்லூரி மூலம்
விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...