SSLC,+2 பொதுத்தேர்வில் 100 விழுக்காடு தேர்ச்சியை உயர்த்த ஆசிரியர்கள் பாடுபடவேண்டும் கல்வி அமைச்சர் அறிவுரை:
தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி.,
ப்ளஸ் 2
பொதுத்
தேர்வில்,
மாணவ, மாணவிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற, ஆசிரியர்கள்,
தலைமை
ஆசிரியர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சிவபதி தெரிவித்துள்ளார்.
பள்ளிக்
கல்வித்துறையின் தொடக்கக் கல்வி இயக்கம் சார்பில்,
திருச்சி
மண்டலத்துக்குட்பட்ட உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கான (ஏ.இ.இ.ஓ.,)
ஆய்வுக்கூட்டம்,
நடந்தது.
திருச்சி,
புதுக்கோட்டை,
பெரம்பலூர்,
அரியலூர்,
கரூர்,
தஞ்சாவூர்,
நாகப்பட்டினம்,
திருவாரூர்
மற்றும் தர்மபரி,
கிருஷ்ணகிரி
ஆகிய,
10 மாவட்டங்களை
சேர்ந்த ஏ.இ.இ.ஓ.,க்கள் பங்கேற்றனர்.
பள்ளி சுகாதாரம்,
மாணவர்
எண்ணிக்கை,
வருகை,
கட்டமைப்பு
போன்றவற்றை மதிப்பிட்டு,
ஒன்றிய
அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த பள்ளிக்கான சுழற்கோப்பை வழங்கப்பட்டது.
விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சிவபதி தலைமை
வகித்து பேசியதாவது:
தமிழக முதல்வர் ஜெயலலிதா,
கல்வித்துறைக்கு,
16 ஆயிரத்து 452
கோடி
ரூபாய் ஒதுக்கீடு செய்து,
மாணவ,
மாணவியருக்கு,
14 வகையான
நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.
ஒரே
நேரத்தில்,
20 ஆயிரத்து,
950 ஆசிரியர்களை
பணி நியமனம் செய்து,
ஆணை
வழங்கினார்.
தமிழக
ஆசிரியர் தேர்வாணையம் துவங்கி,
25 ஆண்டுகளில்,
ஒரு
லட்சத்து,
3,436 பணியிடங்கள்
தான் நிரப்பப்பட்டுள்ளது.
தமிழக
முதல்வர் ஜெயலலிதா,
ஒரே
ஆண்டில்,
ஆசிரியர்,
ஆசிரியர்
அல்லாத பணியிடம் என மொத்தம்,
59 ஆயிரம்
பணிடங்களை நிரப்பி சாதனை புரிந்துள்ளார்.
வரும்,
எஸ்.எஸ்.எல்.ஸி.,
ப்ளஸ் 2
பொதுத்தேர்வில்,
100 சதவீதம்
தேர்ச்சி பெற வேண்டும்.
இதற்கு
ஆசிரியர்கள்,
தலைமை
ஆசிரியர்கள்,
ஏ.இ.இ.ஓ.,க்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இதற்காகத்
தான் தற்போது ஏ.இ.இ.ஓ.,க்கள் கூட்டம் நடத்தப்படுகிறது.
விரைவில்,
தலைமை
ஆசிரியர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும்.
தமிழகத்தில்,
ஒரு
கோடியே,
35 லட்சம்
மாணவ, மாணவியர் உள்ளனர்.
அனைவருக்கும்,
தரமான
கல்வி,
உபகரணங்கள்
சென்றடைய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...