சிவில் சர்வீஸ் தேர்வைத் தொடர்ந்து, டி.என்.பி.எஸ்.சி., தேர்விலும், தமிழ் மொழிக்கு பின்னடைவு:
சிவில் சர்வீஸ் தேர்வைத் தொடர்ந்து, டி.என்.பி.எஸ்.சி., தேர்விலும், தமிழ் மொழி பாடத்திற்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டுள்ளது. இது, கிராமப்புற தேர்வர்களுக்கு, பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட
பதவிகளுக்கு, மத்திய அரசு நடத்தும், சிவில் சர்வீஸ் பிரதான தேர்வுகளில்
(மெயின் தேர்வு), சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. அதில், பிராந்திய
மொழிகளில் தேர்வெழுத, சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
அதன்படி, குறிப்பிட்ட பிராந்திய மொழியில், பிரதான தேர்வை எழுத வேண்டும்
எனில், குறைந்தபட்சம், 25 பேர், அதற்கு முந்தைய தேர்வான, முதல் நிலைத்
தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். இதற்கு குறைவானவர்கள், முதல்நிலைத்
தேர்வில், தேர்ச்சி பெற்றிருந்தால், அவர்கள், தங்கள் தாய்மொழியில், பிரதான
தேர்வை எழுத முடியாது.
தமிழ் இலக்கியத்தில் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே, இந்த பாடத்தை, விருப்ப
பாடமாக எடுக்க முடியும். மேலும், தமிழ் வழியில், பட்டப் படிப்பை
முடித்தவர்கள் மட்டுமே, தமிழ் வழியில் தேர்வை எழுத முடியும். இது,
கிராமப்புற மாணவர்களுக்கு, பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
இந்நிலையில், டி.என்.பி.எஸ்.சி.,யும், தமிழ் மொழி பாடத்திற்கான
முக்கியத்துவத்தை குறைத்து, புதிய பாடத்திட்டத்தில் அறிவிப்பை வெளியிட்டு
உள்ளது. பல லட்சக்கணக்கான தேர்வர்கள் பங்கேற்கும், குரூப்-4 தேர்வில்,
பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம் என, இரு பிரிவுகளின் கீழ், 100
கேள்விகளும், பொது அறிவுக்கு, 100 கேள்விகளும் தரப்படும்.
இதில், பெரும்பான்மையான தேர்வர்கள், பொதுத்தமிழ் பிரிவில், விடை
அளிப்பர். ஒவ்வொரு கேள்விக்கும், தலா ஒன்றரை மதிப்பெண்கள் வீதம், 300
மதிப்பெண்களுக்கு, தேர்வு நடத்தப்படுகிறது. புதிய பாடத் திட்டத்தின்படி,
மொழிப்பாடங்களுக்கான கேள்விகள், 100ல் இருந்து, 50 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
மீதியுள்ள, 150 கேள்விகளும், பொது அறிவு பகுதியில் இடம்பெறும்.
குறைக்கப்பட்ட 50 கேள்விகளும், சிந்தித்து விடை அளிக்கும் வகையில், புதிய
பகுதி கேள்விகளாக, பொது அறிவு கேள்விகளுடன் இணைக்கப்பட்டு உள்ளன. தமிழ்
மொழி பகுதியில் இருந்து, 50 கேள்விகள் குறைக்கப்பட்டுள்ளதன் மூலம், 75
மதிப்பெண்கள், தேர்வர்களுக்கு பறிபோய் உள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...