அரசாங்கம் விளையாட்டுக்கு ஊக்கம் அளிக்கவேண்டும்:
சிவகங்கையில் விளையாட்டு வீரர்களுக்கான தங்கும் விடுதி
கட்டும் திட்டம் பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. சிவகங்கையில் கால்பந்து,
ஹாக்கி, கூடைப்பந்து, தடகள விளையாட்டுகளில் பங்கேற்க, ஏராளமான வீரர்கள்
ஆர்வமாக உள்ளனர்.
இவர்கள் பயிற்சி பெற, மாவட்ட விளையாட்டு அரங்கில் வசதி
உள்ளது. இருப்பினும், வெளி மாவட்ட மாணவர்கள் தங்கி பயிற்சி பெற, விடுதி
வசதி இல்லை. இங்கு விளையாட்டு விடுதி கட்டவேண்டும் என கோரிக்கை
வைக்கப்பட்டது. அரசு இது வரை விடுதி கட்ட நிதி ஒதுக்கவில்லை.
அரசும் மாவட்டந்தோறும் விளையாட்டு விடுதி கட்டப்படும் என
உறுதி அளித்தது. ஆனால், இதற்கான முயற்சி சிவகங்கையில் தொடங்கவில்லை.
இதனால், விளையாட்டு வீரர்களிடையே ஆர்வம் குறைந்து வருகிறது. இவற்றை
தவிர்க்க, அரசு விரைந்து, சிவகங்கையில் மாணவர்கள் விளையாட்டு விடுதி
கட்டவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
கால்பந்து கழக தலைவர் முனியாண்டி கூறுகையில்,
"சிவகங்கையில், விளையாட்டு மாணவர்களுக்கான விடுதி கட்ட, 5 ஆண்டுகளுக்கு
முன்பே அரசுக்கு கோரிக்கை வைத்தோம். சிவகங்கையில் விளையாட்டு விடுதி
கட்டக்கோரி, பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி,
முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பும் முயற்சியில் இறங்கியுள்ளோம்,"
என்றார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...