பெரம்பலூரில் அரசு மருத்துவக்கல்லூரி விரைவில் அமையும் எம்.எல்.ஏ., உறுதி:
பெரம்பலூரில் அரசு மருத்துவக்கல்லூரி விரைவில் அமையும், என பெரம்பலூர் எம்.எல்.ஏ., தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனை டயாலிஸிஸ் சிகிச்சை பிரிவில் பெரம்பலூர் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ், ஆறு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பில் (டயாலிஸிஸ்) ரத்தம் சுத்திகரிப்பு சிகிச்சை இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. இதன் துவக்க விழா நேற்று காலை 11 மணியளவில் நடந்தது. விழாவுக்கு பெரம்பலூர் ஆட்சியர் தரேஷ் அஹமது தலைமை வகித்து, டயாலிஸிஸ் இயந்திரத்தை துவக்கி வைத்தார்.
விழாவில், பெரம்பலூர் எம்.எல்.ஏ., தமிழ்ச்செல்வன் முன்னிலை
வகித்து பேசியதாவது: தமிழக முதல்வர் ஜெயலலிதா ஏழை, எளிய மக்களுக்கும்
அனைத்துவித நவீன மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில்
விரிவான காப்பீட்டு திட்டத்தை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.
இந்துசமய அறநிலைய துறைக்கு சொந்தமான 99 ஏக்கரில் 35
ஏக்கரில் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ளது. இதன் அருகில்
பெரம்பலூர் அரசு மருத்துவக்கல்லூரி அமைக்க வேண்டும் என வரும் 21ம் தேதி
நடக்கும் பட்ஜெட் கூட்டத்தில் பேச அனுமதி கேட்டுள்ளேன். முதல்வரின் அனுமதி
கிடைத்தால் இதுகுறித்து சட்டசபையில் பேசி பெரம்பலூருக்கு அரசு
மருத்துவக்கல்லூரி பெற்றுத்தரப்படும். பெரம்பலூரில் அரசு மருத்துவக்கல்லூரி
விரைவில் அமையும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...