மாற்றுத்திறனாளிக்கான விளையாட்டு போட்டி: சாதனை மாணவிக்கு பாராட்டு:
மாற்றுத்திறனாளிக்கான விளையாட்டு போட்டியில், சாதனை படைத்த மாணவிக்கு பெரம்பலூர் ஆட்சியர் பாராட்டு தெரிவித்தார்.
சென்னையில் சென்ற மாதம் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான
ஏழாவது தேசிய விளையாட்டு போட்டியில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த திவ்யா,
100 மீட்டர், 200 ஓட்டத்தில் 2 தங்கப் பதக்கத்தை வென்றும், பெங்களூருவில்
நடந்த 12வது தேசிய சீனியர் தடகள போட்டியில் தமிழ்நாட்டின் சார்பில்
பங்கேற்று 4*400 ரிலே போட்டி, 400 மீட்டர் ஓட்டப்பந்தயம் ஆகிய போட்டிகளில்
தங்கப்பதக்கமும், 100 மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயம், 4*100 ரிலே
போட்டி மற்றும் குண்டு எறிதல் ஆகிய போட்டிகளில் வெள்ளி பதக்கமும், தமிழக
அணியில் தனிநபர் போட்டிகளில் முதலிடமும் பெற்றார்.
பெரம்பலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில்
பல்வேறு வெற்றிகளை பெற்ற மாற்றுத்திறனாளி திவ்யாவை, பெரம்பலூர் ஆட்சியர்
தரேஷ் அஹமது பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...