மாணவர்களுக்கு விலையில்லா பொருட்கள்: பள்ளி திறக்கும் நாளில் வழங்க நடவடிக்கை:
பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா பொருட்களை, பள்ளி திறக்கும் நாளில் வழங்க, பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
பள்ளி மாணவர்களுக்கு அரசால், 15 வகையான விலையில்லா
பொருட்கள் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்ட இந்த
திட்டம், தாமதமாக துவக்கப்பட்டதால், இந்த கல்வியாண்டு முடியும் நிலையிலும்
கூட, இன்னும் பல பொருட்கள் வழங்கப்படாமல் உள்ளது.
எனவே, வரும் கல்வியாண்டில், பள்ளி திறக்கும் போதே அனைத்து
பொருட்களையும் வழங்க வேண்டும் என்பதற்காக, அந்தந்த மாவட்ட பள்ளிகளின்
எண்ணிக்கை, விலையில்லா பொருட்கள் பெறும் மாணவர்கள் எண்ணிக்கை குறித்து
பட்டியல் அனுப்பும்படி, பள்ளிக்கல்வித்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த பட்டியலின்படி, பள்ளி திறப்பதற்கு 10 நாட்களுக்கு
முன்பு, அனைத்து பொருட்களும், அந்தந்த பகுதிகளுக்கு அனுப்பப்பட உள்ளது. அவை
பள்ளி திறக்கும் நாளில் மாணவர்களுக்கு வழங்க, ஏற்பாடு செய்யப்பட்டு
வருகிறது என்றார், கல்வித்துறை அதிகாரி ஒருவர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...