கல்வி உதவித்தொகை தாமதம் கலெக்டரிடம் மாணவர் புகார்:
கல்வி உதவித்தொகை வழங்கக்கேட்டு, வேளாண்மை கல்வி நிலைய மாணவ, மாணவியர் ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
தஞ்சை அருகேயுள்ள காட்டுத்தோட்டத்தில் அமைந்துள்ள மண்
மற்றும் நீர் ஆராய்ச்சி வேளாண் கல்வி நிலையத்தில், புதிதாக துவங்கப்பட்ட
டிப்ளமோ வேளாண் பாடப்பிரிவில், 30 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.
இப்பிரிவில், கடந்த செப்டம்பர் மாதம் மாணவர்களுக்கு சேர்க்கை முடிந்து,
பாடம் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது.
ஆனாலும் மாணவ, மாணவியருக்கு, மூன்று ஆயிரம் ரூபாய் வரை,
அரசு சார்பில் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை, இதுவரை வழங்கப்படவில்லை.
மேலும் கல்லூரி அடையாள அட்டை தாமதமாக வழங்கியதால், "ஆன்லைன்&' முறையில்
பதிவு செய்யாததால் தான், கல்வி உதவித்தொகை வழங்குவதில் தாமதம்
ஏற்பட்டுள்ளது, என கூறப்படுகிறது.
இதையடுத்து உரிய கல்வி உதவித்தொகையை அரசிடம் பெற்றுத்தர
நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு, நேற்று மக்கள் குறைதீர்க்கூட்டத்தில்,
ஆட்சியர் பாஸ்கரனிடம் மாணவ, மாணவியர், 25 பேர் மனு கொடுத்தனர். தொடர்ந்து,
உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, ஆட்சியர் உறுதியளித்தார். இதனால்,
அனைவரும் கலைந்து சென்றனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...