TNOU தேர்வு திடீர் ரத்து: மாணவர்கள் அவதி:
தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை
மாணவர்களுக்கான தேர்வுகள் நேற்றும் (மார்ச் 23), இன்றும் (மார்ச் 24) காலை
10 முதல் மதியம் 1 மணி, மதியம் 2 முதல் மாலை 5 மணி வரை நடப்பதாக
அறிவிக்கப்பட்டது. இத்தேர்வுக்கான மையங்களும் அறிவிக்கப்பட்டன.
திருநகர் முத்துத்தேவர் முக்குலத்தோர் மேல் நிலைப்பள்ளி
உள்பட சில பள்ளி, கல்லூரிகள் தேர்வு மையங்களாக ஏற்பாடு செய்திருந்தனர்.
தேர்வு எழுத காலை 9 மணிக்கு மாணவர்கள் மையங்களுக்கு வந்ததும் அதிர்ச்சி
அடைந்தனர். ஏனெனில், தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது, தேர்வு தேதி பின்னர்
அறிவிக்கப்படும், மேலும் விபரம் பெற பயிற்சி மைய அதிகாரியை அணுகவும் என,
எழுதி வைக்கப்பட்டிருந்தது.
முன் அறிவிப்பின்றி திடீரென தேர்வுகளை ரத்து செய்ததால்
மாணவர்கள், ஏமாற்றத்தால் வேதனையுடன் திரும்பினர். இலங்கைத் தமிழர்
பிரச்னையையொட்டி உருவான மாணவர் போராட்டங்களால், அனைத்து கல்லூரிகளும் கால
வரையறையின்றி மூடப்பட்டுள்ளன. இதனால் இத்தேர்வுகளும் ரத்து
செய்யப்பட்டுள்ளதாக சிலர் கூறினர்.
இதுகுறித்து, முறையான அறிவிப்பை நேற்றே வெளியிட்டிருந்தால், மாணவர்கள் ஏமாற்றத்தை தவிர்த்திருக்கலாம்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...