வெற்றிக்கு பொறுமை, அமைதி அவசியம்: பெரியார் பல்கலை பதிவாளர்
வெற்றிக்கு பொறுமை, அமைதியும் மிகவும் அவசியம்," என, பெரியார் பல்கலைகழக பதிவாளர் அங்கமுத்து பேசினார்.
அரூர் அடுத்த எருமியாம்பட்டி இ.ஆர்.கே., கலை மற்றும்
அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது.
கல்லூரி
தாளாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். முதல்வர் சக்தி வரவேற்று, ஆண்டறிக்கை
வாசித்தார். சிறப்பு விருந்தினராக பெரியார் பல்கலைக்கழக பதிவாளர்
அங்கமுத்து மாணவிகளுக்கு பட்டம் வழங்கி பேசியதாவது:
"பட்டம் வாங்கும் மாணவிகள் பெற்றோர்களிடம் பாசத்துடனும்,
குடும்ப முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டும். மாணவிகள் தொடர்ந்து அறிவை
வளர்த்துக் கொண்டு புத்திசாலியாக செயல்பட்டால் மட்டுமே சமுதாயத்தில்
முன்னேற முடியும். மாணவிகள் உடல் நலத்தை பேணி பாதுகாக்க வேண்டும். முடிந்த
வரை சமுதாயத்துக்கு உதவ வேண்டும்.
ஒருவர் செய்த உதவியை என்றும் மறக்க கூடாது வாழ்க்கையில்
வெற்றி பெற வேண்டுமானால் பொறுமை, அமைதி மிகவும் அவசியம். ஒவ்வொரு
தோல்வியும் ஒரு பாடத்தை கற்றுத்தருகிறது. மாணவிகளுக்கு மனிதாபிமானம்
அவசியம். மாணவிகள் தொடர்ந்து உயர்கல்வி பயின்று நாட்டை முன்னேற்ற
வேண்டும்." இவ்வாறு பேசினார்.
பெரியார் பல்கலைக்கழக தேர்வில் கம்ப்யூட்டர் பயன்பாட்டியல்
பாடப்பிரிவில் இரண்டாமிடத்தில் தேர்ச்சி பெற்ற மாணவி சண்முகப்ரியாவுக்கு
பதக்கம் மற்றும் இ.ஆர்.கே., கல்வி அறக்கட்டளை சார்பில் உதவித்தொகையாக 2
ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்பட்டது.