ஒரே ஆண்டில் இரண்டு பட்டங்கள்:கல்வித் தரம் குறித்து நீதிபதிகள் வேதனை:
ஒரு மாணவருக்கு ஒரே ஆண்டில் இரண்டு பட்டங்களை பல்கலைக்கழகங்கள்
வழங்குவது கல்வியின் தரத்தை வெகுவாக பாதிக்கும் என சென்னை உயர்நீதிமன்றம்
கூறியுள்ளது.
ஜெகதீஸ்வரி என்ற பெண் கடந்த 2009-2010ம் கல்வி ஆண்டில் பி.எட்.படிப்பினை வழக்கமான முறையிலும், ஆங்கிலத்தில் முதுநிலை பட்டத்தை தொலைதூரக் கல்வி முறையிலும் பெற்றுள்ளார்.
ஜெகதீஸ்வரி என்ற பெண் கடந்த 2009-2010ம் கல்வி ஆண்டில் பி.எட்.படிப்பினை வழக்கமான முறையிலும், ஆங்கிலத்தில் முதுநிலை பட்டத்தை தொலைதூரக் கல்வி முறையிலும் பெற்றுள்ளார்.
இந்நிலையில் ஆங்கில ஆசிரியர் பணிக்கு அவர் விண்ணப்பித்த போது அவருக்கு
பணி வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் மறுத்துவிட்டது. ஆசிரியர் தேர்வு
வாரியத்தின் முடிவை எதிர்த்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு
தொடர்ந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி ராமசுப்பிரமணியன், வழக்கமான படிப்பு முறையில்
ஒரு பாடத்தில் பட்டம் பெற்றவர்கள், அதே ஆண்டிலேயே தொலைநிலைக் கல்வி
முறையில் வேறொரு பாடத்தில் பட்டம் பெற்றால் அந்த பட்டம் செல்லாது என கூறி
ஜெகதீஸ்வரியின் வழக்கை தள்ளுபடி செய்தார்.
ஜெகதீஸ்வரிக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் பணி வழங்க மறுத்ததில் எவ்வித
தவறும் இல்லை என கூறிய நீதிபதி இங்குள்ள பல்கலைக்கழகங்களில் மாணவர்கள்
எப்போது வேண்டுமானாலும், எந்தப் படிப்பையும் படிக்கலாம் என்ற நிலை
காணப்படுவதால்,கல்வியின் தரம் வீழ்ந்து போவதாக வேதனை தெரிவித்தார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...